parigaarangal
6 Posts • 627 views
saravanan.
600 views 2 months ago
#parigaarangal மாத தேய்பிறை அஷ்டமி: கடன் தொல்லை நீங்க, எதிரிகள் விலக கால பைரவர் வழிபாடு!_* _கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியன்று, பைரவரை வணங்குங்கள், இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களெல்லாம் தவிடுபொடியாகும்._ * 🛕🛕🛕தேய்பிறை அஷ்டமி என்பது ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முடிந்து தேய்பிறை காலத்தில் வரும் அஷ்டமி திதியைக் குறிக்கிறது. கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றே போற்றப்படுகிறது. காரணம் இந்த நாளில்தான் பிரம்மனின் அகந்தையை அழிக்க சிவபெருமான் தன் சக்திகளில் ஒன்றாக கால பைரவரைத் தோற்றுவித்தார். இந்த நாளில் சிவபெருமானின் அம்சமான பைரவரை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாதந்தோறும் அஷ்டமி திதி வந்தாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. > அந்த வகையில் இன்றைய தினம் அதாவது டிசம்பர் 12-ம்தேதி வெள்ளிக்கிழமை வரும் தேய்பிறை அஷ்டமி திதி உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டம், கடன் தொல்லை அனைத்தும் தீர ஒரு அற்புதமான நாள். > இன்று(டிசம்பர் 12-ம்தேதி) மதியம் 1.57க்கு தேய்பிறை அஷ்டமி திதி ஆரம்பிக்கிறது. நாளை 13-ம்தேதி சனிக்கிழமை பிற்பகல் 2.58 மணிவரை அஷ்டமி திதி உள்ளது. இது கால பைரவரை வழிபட மிகவும் உகந்த நேரம் ஆகும். > இன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடிய பின்னர் பூஜையறையில் பைரவருக்கு செவ்வரளி மலர் சாற்றி, தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உணவருந்தாமல் விரதம் இருக்கலாம். தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கீழே உள்ள பைரவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யலாம். *பைரவர் காயத்ரி மந்திரம் :* ஓம் திகம்பாராய வித்மஹே தீர்க்க சிஸ்னாய தீமஹி தந்தோ பைரவ ப்ரசோதயாத் முடியாதவர்கள் அல்லது வேறு மந்திரம் தெரியாதவர்கள் ‘ஓம் பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி பைரவரை வழிபாடு செய்யலாம். >இன்று மாலை நேரத்தில் சிவன் கோவிலுக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் தீபமேற்றி மனமுறுகி வேண்டிக்கொண்டால் பைரவர் உங்களை கைவிட மாட்டார். பைரவரை வழிபடுவதால், தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் தொழில் தடை நீங்குவதோடு எதிரிகள் தொல்லை இருக்காது. நம்முடைய துன்பங்கள், கஷ்டங்கள் நீங்கி, நல்லது நடக்கும் என்று நம்பப்படுகிறது. > தேய்பிறை அஷ்டமி நாட்களில் அசைவ உணவு உண்ணுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல் திருமணம், புது வீடு வாங்குதல் போன்ற சுப காரியங்களை தேய்பிறை அஷ்டமியில் செய்யக்கூடாது. நான்கு பேருக்காவது உணவுப் பொட்டலம் வழங்குங்கள். நாய்களுக்கு பிஸ்கட் வழங்குங்கள். இந்நாளில், பைரவரை மனதார வேண்டிக்கொண்டு, அன்னதானம் செய்வது மும்மடங்கு பலன்களைக் கொடுக்கும் என்பது ஐதீகம். நன்மைகள் பல அருளும் ஸ்ரீபைரவ மூர்த்தியை காலபைரவாஷ்டமி நாளில் வணங்கி சகல நன்மைகளும் பெறுவோம்! 🍁🍁🍁
19 likes
9 shares
saravanan.
854 views 3 months ago
#parigaarangal எல்லாம் திரும்பப்பெற அருளும் ‘அரிகேசநல்லூர்' அரியநாத சுவாமி!_* _இக்கோவிலில் சனியின் பிள்ளைகளான மாந்தனையும், மாந்தியையும் மடியில் அமர்த்தியபடி சனியின் மனைவியான ஜேஷ்டா தேவி சந்நிதானம் உள்ளது. இது மிகவும் அரிதான சந்நதியாகும்._ * 🛕🛕🛕செல்வங்களின் அதிபதியான குபேரனின் செல்வங்களைப் பிடிங்கிக் கொண்டு துரத்தி விட்டான் ராவணன். செல்வங்களையெல்லாம் இழந்த குபேரன் வந்து சேர்ந்த இடம் தான் அரிகேசவநல்லூர். அனைத்தையும் இழந்த குபேரன் தன் கையால் இந்த அரியநாத சுவாமியைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து இழந்த செல்வங்களையெல்லாம் மீண்டும் பெற்றான். > அப்பேர்பட்ட இறைவனான அரியநாதர், திருநெல்வேலியில் இருந்து ஒரு மணிநேர பயணத்தில் தான் அருள்பாலிக்கிறார். பெரியநாயகி சமேத ஶ்ரீ அரியநாத சுவாமி திருக்கோவிலைத்தான் (Arianatha Swamy Temple) இக்கட்டுரையில் தரிசனம் செய்யப் போகிறோம். மிகப்பழமையான புராதனமான இந்தத் திருக்கோவிலில் காணக் கிடைக்கின்ற கல்வெட்டுகளில் ஜடாவர்மன் அரிகேச பாண்டியன் கல்வெட்டுதான் காலத்தில் பிந்தையது. இந்தப் பாண்டிய மன்னன் தான் இப்போதிருக்கும் இக்கோவிலைக் கட்டியிருக்கிறான் என்பது வரலாற்றுச் செய்தி. அதன்படிப் பார்த்தால் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில் இதுவாகும். அவன் பெயராலேயே இவ்வூரும் ‘அரிகேசநல்லூர்’ என்று அழைக்கப்படுகிறது. குபேரன் நிறுவிய இந்த அரியநாத சுவாமி கோவிலில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. 1. ஸ்ரீருத்திரத்தில் வரும் சிவநாமம் சிவபெருமானுக்கான சக்தி வாய்ந்த ஸ்ரீருத்ரத்தின் சமகம் பகுதியில் மூன்று முறை வரும் ஒரே சிவநாமம், அரிகேசா என்பதாகும். இந்த நாமத்துக்கான மூர்த்தி அருள்பாலிக்கும் தலமாகும் இந்த அரிகேசவநல்லூர். மூலவரான அரியநாதர் இழந்த நற்பெயர், இழந்த புகழ், இழந்த செல்வம், இழந்த ஆரோக்கியம், இழந்த செல்வாக்கு இதயெல்லாம் திரும்பப்பெற அருள்பவராக வீற்றிருக்கிறார். 2. சுரதேவர் குழந்தைகளுக்கு அடிக்கடி ஜுரம் வருகிறதென்றால் நீங்கள் கண்டிப்பாக இந்தக் கோவிலுக்குத்தான் வர வேண்டும். மூலவரைத் தரிசித்துவிட்டு பிரகாரம் சுற்ற ஆரம்பிக்கும்போது முதலில் நிற்கிறார் இந்த சுரதேவர். கோவில்களில் எளிதாக காணக்கிடைக்காத இந்த சுரதேவரை வணங்கினால் அடிக்கடி ஜுரம் வந்து தொல்லை தராது என்பது நம்பிக்கை. 3. சப்த மாதர்கள் இக்கோவில் கட்டப்பட்ட காலத்தில் சிறுதெய்வ வழிபாடு தமிழக பகுதிகளில் பிரபலமாக இருந்தது என்பதற்குச் சான்றாக, சுரதேவருக்கு அடுத்தபடியாக பிராமி, மகேந்திரி, கௌமாரி, சாமுண்டி, வாராகி, இந்திராணி, வைஷ்ணவி ஆகிய சப்த மாதர்கள் கொலுவிருக்கிறார்கள். 4. பஞ்ச குரு தலங்களில் ஒன்று சப்த மாதர்களுக்கு அடுத்தபடியாக தென்திசை நோக்கி அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி பஞ்ச குருக்களில் ஒருவராவார். வியாழக்கிழமைகளில் இவரை வணங்குவது மிகச்சிறப்பாகும். 5. காசி விஸ்வநாதர் குருவை வணங்கி நகர்ந்தால் கன்னி கணபதி வீற்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து அரியநாதருக்கு நேர் பின்னால் காசியின் தெய்வங்களான விஸ்வநாதர் - விசாலாட்சி அருள்பாலிக்கிறார்கள். முருகரும் தன் மனைவியரோடு அடுத்தபடியாகக் காட்சியளிக்கிறார். 6. மாந்தன் மாந்தியுடன் மூத்தவள். கருவறை உள்ள மகா மண்டப பிரகாரத்தில் முருகரைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரரிடம் வெறுங்கைகளைக் காட்டிவிட்டு நகர்ந்தால் நீதி வழங்கும் கிரகத்துக்கான மூர்த்தி சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார். அவரிடம் ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு வெளிப்பிரகாரம் வந்தால் சனியின் பிள்ளைகளான மாந்தனையும், மாந்தியையும் மடியில் அமர்த்தியபடி சனியின் மனைவியான ஜேஷ்டா தேவி சந்நிதானம் உள்ளது. இது மிகவும் அரிதான சந்நதியாகும். இங்கே விளக்கிட்டு வேண்டுகிறார்கள் பக்தர்கள். 7. முக்ருணி விநாயகர் மதுரை மீனாட்சி கோவிலைப்போல் இங்கும் ஒரு பிரும்மாண்ட முக்ருணி விநாயகர் நம்மை அசத்துகிறார். வெளிப் பிரகாரத்தில் உள்ள இவரைத் தொடர்ந்து ஆறுமுகர் சந்நதி உள்ளது. வெளிப்பிரகாரம் முழுக்க அழகிய நந்தவனம் பராமரிக்கப்படுகிறது. 8. ஜன்னல் வழி பேசிக்கொள்ளும் நண்பர்கள் வெளிப் பிரகார முடிவில் இக்கோவிலின் இறைவனை நிறுவிய குபேரர் காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறத்தில் கல்லிலேயே ஒரு ஜன்னல் உள்ளது. அதன்வழி அவர் அரியநாதரைத் தரிசிப்பாராம். குபேரரும், அரியநாதரும் நண்பர்களாம். இருவரும் இந்த ஜன்னல் வழி பேசிக்கொள்வார்களாம். 9. பெரியநாயகி இந்த சுவாரஸ்யமான பின்புல தகவல் கொண்ட குபேரனையும் அந்த அழகிய குட்டிக் கருங்கல் சாளரத்தையும் தரிசித்துவிட்டு வெளியில் வந்தால் இடப்புறத்தில் தனி கோவிலில் பெயருக்கேற்றபடி 7அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பேரழகியாய்க் காட்சி தருகிறாள் பெரியநாயகி அம்பாள். தரணியில் பெயற்பெற்ற பெரியநாயகி அம்பிகையை மனதார வேண்டிக்கொண்டு அரியநாதரின் அருளையும் பெற்று இழந்தவற்றை மீட்டுக்கொள்வோம். இக்கோவிலுக்குக் கோபுரம் இல்லை. வெளியில் மலர்கள், அர்ச்சனை பொருட்கள் வாங்கிக்கொள்ள சிறு கடை உள்ளது. வாகனம் நிறுத்த தாராளமான இடமும் உள்ளது. *புராதனமான, சக்தி வாய்ந்த அரியநாதரையும் அவரின் நண்பர் குபேரரையும் பெரியநாயகி அம்பிகையையும் வணங்கி அருள்பெற ஒருமுறை போய் வாருங்களேன்.* 🍁🍁🍁
6 likes
15 shares