ஜோதிடம்

7K Posts • 20M views
கருணையும் ஞானமும் நிறைந்த மீன லக்கினம் வாழ்வியல் ரகசியங்கள்!#shorts #rasipalan #rasi #tamil #chennai#🔍ஜோதிட உலகம் 🌍 #ஜோதிடம் #பக்தி ஜோதிடம் #ASTROLOGY #✡️ராசிபலன்
14 likes
14 shares
A. J. Sundar, ஜோதிடர்
4K views 15 days ago
மனைவியை பாதிரியார்களிடம் பறி கொடுத்தவர்கள் பாக்யவான்கள் #யேசப்பா.....அக்கால‌ பாரதத்தில் அசுபதி என்றொரு மன்னன் இருந்தான், அவனுக்கு வாரிசு என ஒரு மகள் இருந்தாள், அழகிலும் அறிவிலும் சிறந்தவளான அவளுக்கு புனிதமான பெயரான சாவித்திரி எனும் பெயர் சூட்டினான், ஆம் சரஸ்வதியின் இன்னொரு பெயர் சாவித்திரி, எது உன்னதமும் உயர்ந்ததும் ஆசீர்வாதமுமானதோ அதற்கு சூட்டும் பெயர் சாவித்திரி அந்த சாவித்திரிக்கு திருமண வயதும் வந்தது, அக்கால இந்து சம்பிரதாயம் பெண்கள் தன் கணவனை தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் அளித்தது, தன் பாதுகாவலர் ஆலோசகரான பெரியவரகள் சூழ தானே மணவாளனை தேடி அலைந்தாள் சாவித்திரி தேடி அலைந்தபொழுது ஒரு கானகத்தை அடைந்தாள், இக்காலம் அல்ல அக்காலத்திலே சில வனங்கள் பாதுகாக்கபட்டிருந்தன. அங்கு முனிவர்கள் தவம் செய்வார்கள், வேடவருக்கோ இல்லை உயிர்களை கொடுமை செய்து கொல்பவருக்கோ அனுமதி இல்லை, உயிர்பயமில்லா அக்கானகத்தில் மான்களும் முயல்களும் இன்னும் பல விலங்குகளும் மனிதரின் அருகில் வந்து பயமின்றி உறவாடும் அந்த வனம் வாழ்வில் ஞானத்தை உணர்ந்த ரிஷிகளுக்காகவும் ஞானத்தை தேடும் மானிடருக்காகவுமானது, அதை தாண்டும் எந்த அரசனும் முடி துறந்து வாள் துறந்து சாதாரண உடை அணிந்து அங்கிருக்கும் தலமை முனிவரை கண்டு வணங்கிவிட்டு செல்லுதல் மரபு அப்படித்தான் அங்கிருந்த மகா முனியிடம் ஆசி வாங்க சென்றாள் சாவித்திரி, அங்கே பல நாட்டு மன்னர்கள் வந்து செல்வார்கள் என்பதால் அவளின் சுயம்வர கணக்கும் அதில் இருந்தது நல்லோனை ஞானமும் அறிவும் பக்தியும் இருக்குமிடம் அன்றி எங்கே தேடமுடியும், அவ்வகையில் சாவித்திரியின் கணக்கு மகா சரியானது, அவளுக்கு அதை கணக்கிடும் அளவு அறிவும் இருந்தது சாவித்திரி அங்குதான் அவனை கண்டாள், அழகும் அறிவும் தெளிவும் பக்தியும் நிரம்பிய சீடனாக அவன் அங்கு வலம் வந்தான் அவள் அரசவையின் ராணி என்பதால் பார்த்ததும் உணர்ந்தாள், "இவன் சாமான்யன் அல்ல, ராஜகளையும் அதற்குண்டான ரேகைகளும் உடலெங்கும் படர்ந்திருக்கின்றன" என்றவள் நெடுநேரம் அவனையே நோக்கிகொண்டிருந்தாள் விதி தன் வேலை தொடங்க வேண்டிய நொடியில் அவளுக்கு அவன் மேல் ஈர்ப்பினை ஏற்படுத்திற்று, ஆம் விதிபலன் அன்றி காதல் மலராது வயதான தந்தையினையும் தாயினையும் இப்படி கவனிப்பவன் தன் மனைவியினை எப்படி எல்லாம் கவனிப்பான் என எண்ணியவளுக்கு காதல் கூடிற்று பொதுவாக‌ பெண்கள் விரும்புவது பாதுகாப்பும் அன்புமே, அன்பு ஒன்றே அவர்களை வீழ்த்தும் ஆயுதம், அன்பு கொடுக்கும் காவலே அவர்களுக்கான வாழ்வென கருதுவார்கள், அந்த அன்பை பலமடங்கு திருப்பி கொட்டியும் கொடுப்பார்கள் சத்தியவான் தனக்கு சரியானவன் என்ற அவளின் உறுதி கூடிற்று, நிலைபெற்றும் விட்டது முனிகளுக்கான கானகத்தில் ராஜமுனிக்கு சேவை செய்பவன் நிச்சயம் மகா நல்லவனாக இருக்க வேண்டும் என விசாரித்ததில் மேற்கொண்டு அவளுக்கு உகந்த தகவல் வந்தது அவன் துயுமத்சேனன் எனும் அரசனின் மகன், துயுமத்சேனன் பெரும் அரசன் எனினும் எதிரிசதியால் நாடிழந்து கண் இழந்து அபலையாய் அகதியாய் இந்த கானகத்தில் மனைவியும் குழந்தையோடும் அடைக்கலமானான், ஆம் இங்கு யாரும் வந்து அவனையோ அவன் மகனையோ கொல்லமாட்டார்கள், அதைவிட பாதுகாப்பு இல்லை அந்த சத்தியவானை மணமுடிக்க தனக்கு தடையேதுமில்லை என்பதை உணர்ந்தவள் தந்தையிடம் விஷயத்தை சொல்லிவிட்டு மன்றம் ஏற தயாரானாள் அந்த அசுபதி மன்னன் பலரோடும் கூடி பேசினான், தனக்கு மகளை வாரிசாக அளித்த தேவர்களிடம் அவன் மன்றாடி அனுமதிபெற பிரார்த்தித்தபொழுது நாரதர் தோன்றினார் அவர் வந்த இடம் என்னாகும் கலகமே மிஞ்சும், ஆனால் பின்னாளில் நிச்சயம் நல்லதில் முடியும் நாரதர் வந்த வேலையினை சரியாக செய்தார் "அசுபதி அந்த சத்தியவான் நல்லவன், ஆனால் அவன் கர்ம வினையும் முன்னோர் செய்த பாவமும் அவனை விடாது, இன்னும் ஒரு ஆண்டுதான் அவன் வாழ்வு, யோசித்து மகளை முடிவெடுக்க சொல்" என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் இதை கேட்டதும் அசுபதிக்கு வியர்த்துகொட்டிற்று, சாவித்திரியினை அழைத்து விவரத்தை சொல்லி, திருமணத்தை நிறுத்த கெஞ்சினான். எந்த தகப்பனுக்கு தன் மகளை விதவை கோலத்தில் பார்க்க பிடிக்கும்? தந்தை மகள் மேல் கொண்ட பாசம் கொஞ்சமா? சாவித்திரி கொஞ்சமும் அஞ்சவில்லை "ஒருவேளை மணமான பின் இது தெரியவந்தால் என்ன செய்வீர்கள்? அவன் என் கணவன் என பார்த்த நொடியிலே முடிவு செய்துவிட்டேன், இனி இன்னொருவனை மணந்தால் குல அவமானம், இந்து பெண்ணுக்கே அவமானம், உங்கள் வளர்ப்புக்கும் தாய்க்கும் அவமானம்" அசுபதி மன்னனால் பதில் பேசமுடியவில்லை, அரசன் வாழ்வு என்றுமே நெருப்புமேல் ஆடும் ஊஞ்சல், ஆம் போரில் சாகலாம், சூழ்ச்சியில் சாகலாம், ஏன் உறவுகளே கொல்லலாம். எந்த அரசன் வாழ்வும் தன் மகளின் மாங்கல்யத்துக்கு உத்திரவாதம் அல்ல‌ விதிபடி நடக்கட்டும் என அனுமதி கொடுத்தான் அசுபதியும் சாவித்திரியும் மட்டும் அறிந்த ரகசியத்துடன் திருமணம் மகா விமரிசையாக நடந்தது சாவித்திரி முடி துறந்தாள், நகை துறந்தாள், கந்தல் உடையுடன் கணவனுடன் அதே கானகம் சென்றாள் அந்த அன்பு அவளை குடிசையில் வாழ வைத்தது, விறகு பொறுக்க வைத்தது, காய் கனி கந்த மூலங்களில் சமைக்க வைத்தது, அந்த அன்பு கண் தெரியா மாமனாரையும் வயது முதிர்ந்த மாமியாரையும் கவனிக்க வைத்தது சத்தியவானை சந்தித்த மறு நொடியில் புதிதாய் ஏழையாய் பிறந்தாள் சாவித்திரி, அரசும் கொற்றமும் குடையும் ரதமும் அரண்மனையும் சேடியரும் நொடியில் மறைந்தனர் ஆம், அன்புக்கு அந்த சக்தி உண்டு, தூய்மையான பாசம் எதையும் துறக்க வைக்கும். அது காதல் என்றும் சொல்லலாம் பதிபக்தி என்றும் சொல்லலாம் ஆனால் எந்நிலையிலும் சத்தியவான் ஒருவருடத்தில் இறப்பான் என்பதை அவள் சொல்லவே இல்லை, தனக்குள்ளே மறைத்திருந்தாள். அழுவாள் கண்களை துடைப்பாள் அந்த ஒருவருடத்தில் ஓராயிரம் வருடம் வாழ்ந்த சந்தோஷத்தை கொடுக்க நினைத்து கொடுத்து கொண்டும் இருந்தாள் சத்தியவான் வாழ்வு முடியும் நேரம் வந்தது, அவனின் விதிப்படி அவனை அழைத்து செல்ல வந்தனர் எமனின் தூதர்கள் அவர்கள் வகையில் அவனும் கடமையாளன். கொடுவாள் வெட்டி தண்டனை நிறைவேற்றுபவன், தூக்கு மேடையில் கயிரை சொருகுபவன் போல அவன் கடவுளின் ஊழியன் அவன் பாசம் அன்பு கருணை எல்லாம் பார்க்கமுடியாது, எந்த கதறலுக்கும் அவன் காதை மூடி கொள்ள வேண்டும் தலையின் உறுப்புகளில் ஆச்சரியமானது காது, ஆம் கண்ணுக்கு இமை உண்டு, வாய்க்கு உதடு உண்டு, மூக்குகும் அடைப்பு உண்டு, ஆனால் காதுக்கு பூட்டு இல்லை சக உயிரின் கதறலின் வலிமையினை காது மனதுக்கு கொண்டு செல்ல வேண்டும் அது பூட்டபட கூடாது என்பது கடவுளின் கணக்கு ஆம் கண்ணீரை விட கதறலுக்கு வலி அதிகம் ஆனால் தூதர்கள் அதையும் கடந்துதான் உயிரை கொண்டு செல்ல வேண்டும் என்பது அவனுக்கான விதிப்பு அந்த தூதர்கள் சத்தியவானை நெருங்கினான், தொழுநனை தவிர யாரையும் தொழா சாவித்திரிக்கு அவன் கண்ணில் தெரிந்தான் தூதர்கள் சும்மா வருவானா, அவன் வரும்பொழுது அதற்கேற்ற சூழலும் வருமல்லவா? எமன் காலன் தூதன் என்பார்கள் அல்லவா? அப்படி தூதர்கள் வந்ததும் காலமும் கூடிற்று காட்சிகளும் அரங்கேறின‌ தலை சுற்றுவதாக சொல்லி சாவித்திரி மடியில் சாய்ந்தான் சத்தியவான், அத்தோடு அவன் உயிரை எடுக்க வந்தனர் எமனின் தூதர்கள் ஆனால் சாவித்திரி சத்தியவானை சுற்றி நின்ற அக்கினி அவர்களை உள்ளே விடவில்லை, அவர்கள் எமனை அழைத்தனர் அங்கு வந்தான் எமன் எமன் தேவர்களில் ஒருவன் என்பதால் வழிவிட்டது அக்கினி, பாசத்தை வீசி சத்தியவானின் உயிரை கட்டினான் எமன், ஆம் பாசம் என்றால் கயிறு என்று பொருள் குடும்பம், பிள்ளை, சொத்து, உலகம் என ஒவ்வொரு மனிதனையும் கட்டியிருப்பது கண்ணுக்கு தெரியாத கயிறான பாசம், அதிலிருந்து விடுவித்து இழுத்து செல்வது எமனின் கயிறு சாவித்திரி அலறினாள், துடித்தாள் ஆனால் வழியுண்டா? கானத்து தலமை ரிஷியும் இது விதியம்மா தடுப்பது யார் என அமர்ந்திருந்தனர், பொருள் என்றால் தகப்பன் நொடியில் மீட்டு தருவான், உயிரென்ன்றால் யார் மீட்க முடியும், ஆயினும் தடுத்து அலறி துடித்து நின்றாள் அவள். அழுதவளை கண்ட எமன் தத்துவத்தை சொன்னான் "மகளே, உலகில் முதலில் மரித்த மனிதன் நானே, என் கடமை உயிரினை அழைத்து செல்வது என் கடமை எனக்கு வழிவிடு" தள்ளி நின்றாள் சாவித்திரி, எமன் சத்தியவானோடு நடக்க பின் தொடர்ந்தாள், அவள் வந்து கொண்டே இருக்க எமன் பரிதாபபட்டு கேட்டான் "மகளே எங்கே வருகின்றாய், நீ வரமுடியாத இடம் இது, எல்லா மனிதருக்கும் பொதுவானது, உண்மையினை உணர்ந்து திரும்பி செல்" "இது என் கணவனின் உயிர் மட்டுமல்ல என் உயிரும் அதுதான், அது இருக்குமிடத்தில்தான் நான் இருப்பேன் அது மனைவியாகிய என் உரிமை கடமை" என்றாள் "மகளே இது தெய்வ கணக்கு உனக்கு புரியாது, என்னை பின் தொடராதே இவன் திரும்ப மாட்டான்" என்றான் எமன் "என் உயிரையும் எடுத்து செல் தேவனே, அவர் இல்லா உலகத்தில் நான் இனி இருக்கமுடியாது" என்றாள் சாவித்திரி "மகளே, உனக்கான நேரமும் விதியும் வராதபொழுது உன் உயிரை என்னால் இழுத்து செல்லமுடியாது, நீ என்னை பின் தொடராதே" என்றான் எமன் அவளோ அவன் பின்னாலே சென்றாள், அவளின் உறுதியில் அதிசயித்த எமன் மறுபடியும் சொன்னான் "மகளே என் கடமை இது, நானாக இவனின் உயிரை எடுத்து எனக்கொன்றும் ஆகபோவதில்லை, படைப்பின் நோக்கத்தை இயக்கும் பரமனின் கட்டளைபடி நான் ஒரு வேலைக்காரன், என்னை தொடர்வதால் உனக்கொன்றும் நடக்காது, கண்ணீரும் கதறலும் எதையும் மாற்றாது, திரும்பி போ" சாவித்திரி சொன்னாள் "அவர் உயிர் இருக்குமிடத்தில்தான் என் உயிரும் இருக்கும், அன்பின் பிணைப்பு அது, அதை யாராலும் உடைக்க முடியாது, என் உயிருடன் என் உடல் கூட வருகின்றது, நான் என்ன செய்வேன்?" மெல்ல புன்னகைத்த எமன் "மகளே ஒருவரம் கேள், ஆனால் இவனை மட்டும் கேட்காதே அவன் திரும்ப முடியாது". சாவித்திரி தனக்காக கேட்கவில்லை அப்பொழுதும் கணவனின் நோக்கத்திற்காக கேட்டாள் "என் மாமனாரின் கண்பார்வை திரும்ப வேண்டும், அவர் ராஜ்யம் அவருக்கு கிடைக்க வேண்டும்" தேவர்களில் ஒருவனாகிய எமன் அதற்கு மகிழ்ந்து வரமளித்தான், "உனக்கு ஏதும் கேட்காமல் உன் கணவனின் குடும்ப கஷ்டம் உன் கஷ்டமாக நினைத்து வேண்டியதற்கு இரங்கி அந்த வரத்தை அளித்தோம், நீ போகலாம்" என்றான் அவளோ தொடர்ந்து வந்தாள் "மகளே சொல்வதை கேள், மானிடர்கள் எம்மோடு வரமுடியாது, வாழ்வின் அனைத்து கர்மாக்களையும் அனுபவித்து, விதியினை முடித்த அனுபவத்தோடே வரமுடியும் நீ கிளம்பு" என்றான் "தேவனே, என் வாழ்வும் விதியும் அவரன்றி வேறு யார், நான் வேறு எங்கு செல்வேன்" என்றாள் சாவித்திரி "அவன் நரகத்துக்கு போனால் அங்கும் போவாயோ? முடியாதல்லவா திரும்பி செல்" என்றான் எமன் "அவருக்கு விதிக்கபடுவது நரகமானாலும் எனக்கென்ன தயக்கம், அவர் இருக்குமிடமே எனக்கு சொர்க்கம் அல்லவா?" அந்த பதிலே அதிசயித்த எமன் "மகளே இன்னொரு வரம் கேள், ஆனால் இவனை மட்டும் கேட்காதே, இறந்தவன் திரும்ப முடியாது" "எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், அவர்கள் மாமனாரின் ராஜ்யத்தை ஆளவேண்டும்" இவ்வளவுதானே மகளே, உன் பூரண அன்பிற்காய் அதை அருளினோம் , இனி எம் தேவலோக கடமையில் குறுக்கிடாதே, மங்கலம் உனக்கு உண்டாகட்டும்" என நகர்தான் எமன் அவ்வளவுதான், அவன் முன்னால் சென்று மறித்து நின்றாள் நின்றாள் சாவித்திரி "மானிடபெண்ணே, இனி எம்மால் பொறுக்கமுடியாது. அழுது புரண்டாலும் உலகே அழிந்தாலும் இறந்தோர் எழமாட்டர். எம் வழியினை தடுப்பது படைப்பின் சக்கரத்தை நிறுத்துவதற்கு சமம், சூரியனை கட்டி வைப்பாயோ, நிலவை மறைப்பாயோ, திரும்பி செல் "தேவனே என்னை மன்னித்து கொள்ளுங்கள், வரம் கொடுத்தது நீங்கள், கொடுத்த வாக்குபடி வரத்தை கொடுங்கள்" "எல்லாம் கொடுத்தாயிற்றே பெண்ணே, இனி என்ன?" "ம்ம், தேவனே எனக்கு வாரிசுகள் கணவனன்றி எப்படி வருவார்கள்? கணவனை தவிர வேறு யாரையும் மனதாலும் என்னால் நினைக்க முடியாது, என் கணவன் திரும்பி வருவதே உம் வாக்கு நிறைவேற ஒரே வழி , கொடுத்த வாக்கை காப்பாற்றமுடியாவிட்டால் உம் தேவர் பகுதியே பறிக்கபட்டு, சாபத்து நிலை அடைவீர் மறக்க வேண்டாம்.." கையறு நிலையில் நின்றான் எமன், அவனுக்கு அவன் வரத்தையும் காக்க வேண்டும் அந்த உயிரையும் கொண்டு செல்ல வேண்டும். இது முடியாது என்பது விளங்கிற்று தன் கடமையில் இருந்து அவசரபட்டு தவறி வாக்கு கொடுத்துவிட்டோமோ என் அஞ்சினான், தயங்கினான், இனி தான் நகரமுடியாது என்பது தெரிந்து மேல் உலகுக்கு தன் நிலை அறிவித்தான் அன்னை சக்தி தோன்றினாள், ஒரு பெண்ணின் பாசம் கணவனுக்கு வாழ்வாகும், தெய்வத்தின் விதியினை மீறி அவனின் ஆயுளை கூட்டுமளவு, விதியினையே மாற்றுமளவு அதற்கு சக்தி உண்டு என உலகுக்கு சொல்லும் வாழ்வு இவளது என ஆசீர்வதித்தாள் எமனும் சத்தியவானை விடுவித்து திரும்பி சென்றான் அன்று பங்குனியும் மாசியும் கூடும் மாலை , அப்பொழுதுதான் சாவித்திரி தன் கணவனின் உயிரை மீட்டெடுத்தாள் கார் என்றால் அரிசி, அந்த அரிசிமாவில் அடை செய்து தன் விரதத்தை முடித்து அன்னைக்கு படைத்து அவள் உண்டாள், கார் அடை எனும் பெயர் வந்தது இப்படித்தான் . #🙏கோவில் #ஜோதிடம் #தின பலன் #📺அரசியல் 360🔴
19 likes
30 shares