மண்ணில் வாழ்ந்த மகான்கள்
3K Posts • 2M views
சிவமணியம் கேள்வி: சூட்சும சரீரம்னா என்ன? பகவான்: கனவிலே உங்களுக்கு உடம்பு இருக்கா? இந்த உடம்பிலே இருந்து அது வேறதானே? அதுதான் சூட்சும சரீரம். கேள்வி: இறந்த பிறகு சூட்சும சரீரம் இருக்குமா? செத்த பிறகு என்ன ஆவோம்? பகவான்: கனவிலே பல அனுபவங்களை அனுபவிச்சு விழிச்சுக்கற மாதிரிதான், பிறப்பு இறப்பு எல்லாம். கேள்வி: இறந்த பிறகு சூட்சும சரீரம் நாப்பது வருஷம் இருக்குங்க றாங்களே? பகவான்: இந்த நனவுடல்லே இருந்து கனவு உடலை சூட்சுமம்கறோம். கனவு உடல்லே இருக்கும்போது அப்படிச் சொல்லலே. இப்போ சூட்சுமம்ன்னு சொல்றது அப்போ ஸ்தூலமா இருந்தது. அங்கேயிருந்து பாக்கும்போது இது சூட்சுமம். இரண்டுக்கும் வித்தியாசம் ஒண்ணும் இல்லை. இரண்டும் பொய். அங்கங்கே அது அது உண்மைன்னா... தூங்கும்போது இந்த இரண்டு உடம்பும் இல்லை. எப்பவும் மாறாம மூணு நிலையிலேயும் இருக்கறது ஒண்ணுதான். நாமதான் அது. கேள்வி: மதங்கள் ஏன் கடவுள், சொர்க்கம், நரகம் இதப்பத்தியே பேசுது? பகவான்: உலகத்தைமாதிரி நாமும் பொய்த் தோற்றம்தான்... இருக்கறது உள்ள பொருள் ஒண்ணுதான்னு ஜனங்களுக்குப் புரியவைக்கறதுக்குத்தான். மதங்கள் கேக்கறவனோட பக்குவத்துக்கு ஏத்த மாதிரிதான். பகவத் கீதையையே எடுத்துப்போமே... அர்ஜுனன் சண்டை போட மறுக்கறான். என்னோட சொந்த சகோதராளையும்... வித்தை சொல்லிக்கொடுத்த குருவையுமா கொஞ்சம் இடத்துக்காக கொல்லச் சொல்றே... முடியாதுங்கறான். அப்போ கிருஷ்ணர் சொன்னார். "நீ பாக்கற எல்லாமே... நீயோ, நானோ முன்னாடியும் இல்லை. இப்பவும் இல்லை. அப்புறமும் இல்லை. யாரும் பிறக்கலே, யாரும் இறக்கலே. இந்த உலகமும் இல்லை. நான் இதே உண்மையைத்தான் முதல்லே சூரியனுக்கு சொன்னேன். அவன் மூலமா இட்சுவாகுக்கு சொன்னேன்." அப்போ அர்ஜுனன் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினான். இரு, நீ இப்போ கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடிதானே பிறந்தே. நீ சொல்ற ஆளுகளெல்லாம் எப்பவோ இருந்தவா. என்ன கதை விடறே'ன்னான். கிருஷ்ணர் அர்ஜுனனாலே, புரிஞ்சுக்க முடியலேன்னு நிலைமையை உணர்ந்து "ஆமா, உனக்கும் எனக்கும் இதுக்கு முன்னாடி ஏகப்பட்ட பிறப்பு இருந்தது. அதெல்லாம் எனக்குத் தெரியும். உனக்குத் தெரியாது" ன்னார். இப்போ இந்த இரண்டு செய்தியும், அதாவது முதல்லே, 'யாரும் பிறக்கலே இறக்கலே'ன்னார். அடுத்து, 'ஏகப்பட்ட தடவை பிறந்தோம்'கறார். எது உண்மை? இரண்டும் சரிதான். வேறு வேறு பக்குவத்துக்கு. இப்படி ஏன் சொல்றா? நாம யாருங்கற உண்மையிலே நிலை பெறுவதற்குதான். கேள்வி: எப்பவும் நீங்க கீழ இறங்கவே மாட்டேங்கறீங்க. மேலான உண்மைய மட்டுமே பேசறீங்க! பகவான்: (சிரித்துக்கொண்டே) எல்லோருக்கும் எப்பவும் தினசரி நடைமுறையிலே இருக்கற சர்வசாதாரணமான எளிய உண்மையை உடைச்சுப் பேசினா... இப்படிச் சொல்றேள். நம்மளப் பத்தின உண்மையைத்தானே பேசறோம். 'நான் இருக்கேன்'கற உணர்வு இல்லாத ஆள் யாராவது இருக்காளா? அதைப்பத்தி கேக்கவே யாரும் பிரியப்பட மாட்டேங்கறா. அதை விட்டுட்டு சொர்க்கம், நரகம், செத்த பிறகு எப்படி இருப்போம். இதிலேதான் ஆர்வம் இருக்கு. அவா விரும்பறது எல்லாம் வித்தியாசமா, புரியாததா ஏதாவது வேணும். சர்வசாதாரணமான எந்த மறைப்பும் இல்லாத உண்மையை விரும்பறது இல்லை. இதுக்காகத்தான் மதங்கள் கதைவிடறது. வழிக்குக் கொண்டு வரணுமில்லையா! அங்கேயும் இங்கேயும் அலைஞ்சு திரும்பவும் எப்பவும் இருக்கற ... இந்த 'நான்'கற எளிய உண்மைக்குத்தான் வரணும். அத இப்போவே! இங்கேயே! ஏன் இந்த எளிய உண்மையிலே நிலைபெறக் கூடாது? கைலாசம், வைகுண்டம், சொர்க்கம், நரகம் எந்த லோகமாயிருந்தாலும் அதைப் பாக்கறதுக்கு ஒருத்தன் வேணும். பாக்கறவனோட உண்மைதான்... அந்தந்த லோகங்களோட உண்மை. பாக்கறவன் இல்லாம எந்த லோகமும் இல்லே. எந்த லோகமும் நம்மளத் தவிர வேறயா இருக்காது. உண்மை தெரியாத ஒருத்தன் கூட உலகத்தைப் பாக்கும்போது அவனையேதான் பாக்கறான். காண்பான் காட்சியா பிரிஞ்சு நடக்கற இந்தக் கூத்தே நாமதான். இங்கே ஏகப்பட்ட ஜீவர்கள் இல்லை. இருக்கறது நாம மட்டும்தான். எல்லோரும்கறதே பெரிய பொய். இருக்கறதுதான் ஒரே உண்மை. பக்கம்: 151 - 154 அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
8 likes
12 shares
நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் துரியாதீத தவத்தால் போகும்: . "ஜீவகாந்தத்தின் விளைவுதான் மனம். மனம் தன் மூலத்தை அறிவதற்காகவே அடைவதற்காகவே விரிகிறது. விரிந்து விரிந்து நிற்கிறது. அனுபோக உணர்ச்சிகளில் இருக்கும் மனதிற்கு வழி தெரியவில்லை. வேகமோ குறையவில்லை. ஆகவே எங்கெங்கோ சென்று நிற்கிறது. எது எதிலேயோ சிக்கிக் கொள்கிறது துன்புறுகிறது. ஆனால் தன் லட்சியத்தை அடையும் வரை மனதின் விரியும் முயற்சி சோர்வடைவதில்லை. மெய்ப்பொருளை உணர்ந்த பிறகுதான் மனதிற்கு அமைதி கிட்டுகிறது. அதுவரை அமைதி கிடைப்பதேயில்லை. தன் மூலத்தை (ஆதி நிலை) அறிய எழுந்த வேகம் திசை தப்பி நிற்கும் அளவிற்கு அமைதியின்மையின் அளவும் துன்பத்தின் அளவும் இருக்கும். பிராயச்சித்தம், மேல்பதிவு, தேய்த்தழித்தல் (Expiation, Superimposition and Dissolution) என்று கருமப் பதிவுகளைப் (Sins and Imprints) போக்கிக் கொள்ள மூன்று வழிகள் இருப்பதை நான் பலமுறை விளக்கியுள்ளேன். அவற்றில் கடைசியான தேய்த்தழித்தல் ( Dissolution ) என்பது தவத்தினால் தான் சாத்தியமாகும். ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும். துரியநிலைத் தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும் போகும். துரியாதீத தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும், சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும். நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் துரியாதீத தவத்தால் போகும். துரியாதீத தவம் ஒரு மாபெரும் புதையல். இதில் எல்லாமே அடக்கம். எந்த அதிர்வியக்கத்தில் ( Mind frequency) மனம் நின்றால் பிரபஞ்ச ரகசியம் எல்லாம் அறியப்படுமோ அந்த இடந்தான் சமாதிநிலை (ஆதி நிலை). துரியாதீத தவத்தால் இந்நிலையில் நிலைத்து பழக்க அறிவு அமைதியைப் பெறுகிறது. . துரியாதீதம்: "தூயப் பெருநிலை துரியாதீதமோ துயர், மகிழ் விரண்டையே துய்த்த என் அறிவை காலம், பருமன், தூரம் விரைவெனும் கணக்கினைக் கடந்து மெய்ப்பொருளோடு இணைத்தது; இனிப் பழிபுரியேன் புரிந்தவை களைந்தேன் இறைநிலை உணர்ந்தேன் இணைந்தேன் நிறைந்தேன் இனி என் உடல் உயிர் ஆற்றலை முறைப்படி இயக்கிக் கடமையை புரிவேன்." . சமாதி நிலை: "உடலியக்கம் நின்றுவிட்ட சவத்தை மண்ணில் உள்புதைத்து சமாதி என்று பூஜை செய்து உடலியக்கம்பெற்ற பல பொருள் அழித்து உள அமைதியை இழந்து சோர்ந்தோரேனும் உடலியக்கம் அறிவியக்கம் பிறப்பு இறப்பு உண்மைகளையறிந்து பயன் அடைய வென்றால் உடலியக்கம் நிற்கும் முன்னே கருதவத்தால் உள்நாடி சமாதி நிலையறிய வாரீர் !" . வாழ்க வையகம் வாழ்க வளமுடன். ,*-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.* 🚩🕉🪷🙏🏻 #வேதாத்திரி மகரிஷி யோகா #வேதாத்திரி வாஸ்து எனர்ஜி சிஸ்டம்ஸ். #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பக்தி போதனைகள் #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
21 likes
22 shares
🧡ஒரு நாள் சூரி நாகம்மா,பகவானை வணங்கியப் போது நடுங்கிய குரலில் பகவானே...!நான் முக்தியடைய வழிக் காட்ட வேண்டும், என்றார். 🧡கருணையே உருவான பகவான், திரும்பி,அவரை நோக்கி தலையை அசைத்து ஒப்புதல் அளித்தார். 🧡பகவானின் இச்செயல் விசித்திரமானதாக இருந்தது. 🧡ஏனென்றால் இத்தகைய கேள்விக்கு எதிர்க்கேள்வியாக,யார் முக்தியை விரும்புகிறார்❓ 🧡யார் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்❓ 🧡என்பதாகவோ,அல்லது மௌனமாகவேத்தான் இருக்கும் அவரது பதில். 🧡இதுப்பற்றி நாகம்மா எச்சம்மாளிடம் கூறியப் போது, நீ எத்தனை பாக்கியசாலி! 🧡பகவான் விரைவிலேயே உனக்கு அபயம் கொடுத்துள்ளார்,என்று எச்சம்மாள் கூறினார். 🧡அவர் கூறியதன் பொருளென்ன❓ என்று நாகம்மா வினவியப் போது 🧡இப்போதிலிருந்து உனக்கு பிறப்பும்,இறப்பும் இல்லை. 🧡பகவான் உன்னை ஏற்றுக் கொண்டு விட்டார். 🧡உனக்கு இனி பயம் இல்லை. அதுவே தான் உனக்கு முக்தி என்று விளக்கிக் கூறினார். 🧡பகவான் தன் முழு கவனத்தையும் நாகம்மா மீது செலுத்தினார். 🧡ஒரு நல்ல மாணவியைப் போன்று அவரும்,பகவானுடைய உபதேசமான ஆத்ம விசாரத்தில் மூழ்கினார். 🧡அவ்வப்போது அவரால் ஆழ்ந்த தியானத்தில் இருக்க முடிந்தது, என்றாலும்,இடையிடையே அவரை எண்ணங்களும் திசை திருப்பின. 🧡குறிப்பாக பகவான் முன் அமர்ந்து கண்களை மூடி தியானிக்கும் போது,இந்த எண்ணங்கள் என்னை சூழ்ந்துக் கொள்ளும். 🧡நான் கண்களை திறந்துப் பார்த்தால் பகவானுடைய கவனம் என் மீது பதிந்திருக்கும்,என்று கூறியதோடு எனது எண்ணங்களையெல்லாம் பகவான் விரட்டினார்,என்று தெரிவித்தார். 🧡நாகம்மா இயற்கையாகவே சிறந்த கவியாகவும்,எழுத்தாளராகவும் இருந்தார். 🧡பகவான் தடைகள் ஏதும் பிறப்பிக்காதப் போதும்,அந்த நாட்களில்,பெண்கள் பகவானை அணுகி சகஜமாக பேசத் தயங்குவார்கள். 🧡கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில்,அது மேலும் கடினமாக இருக்கும். 🧡அத்தகைய தினங்களில்,தியானம் பற்றித் தனக்கு அவ்வப்போது எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் கோரி, நாகம்மா,பகவானுக்கு ஒரு சீட்டு எழுதி அனுப்பி வைப்பார். 🧡அந்த சந்தேகங்களையெல்லாம் நீங்கள் எதற்காக கவனிக்கிறீர்கள்❓ அவ்வாறு செய்வாதால் நீங்களே அவற்றிற்க்கு சக்தி அளிக்கிறீர்கள்,பதிலாக இதயத்தில் ஆழ்ந்து மூழ்குங்கள்,என்று பகவான் அவரை கடிந்துக் கொள்வார். 🧡ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்து,என்னுடைய அக நோக்கை வலுப்படுத்தியப் போது, சுற்றி வளைக்காமல்,நேரடியாக அதை நிலைப்படுத்தினார். 🧡பகவான்,அது காய்ந்து போன நிலத்தில் தண்ணீர் பாய்ந்து, பூக்களை மலர்விப்பது போன்று இருந்தது. 🧡என்னுடைய ஆன்மீக வாழ்கை அத்தகையது என்று கவிதை நடையில் சூரி நாகம்மா கூறுவார். 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
13 likes
15 shares