irav vanakkam

66 Posts • 126K views
saravanan.
1K views 1 months ago
*(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam) #irav vanakkam அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்,* *மூலவர் : ஆதிநாராயணர்.* *அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி.* *தீர்த்தம் : கிணற்றுநீர்.* *ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்.* *ஊர் : பாரியூர் -638 476.* *மாவட்டம் : ஈரோடு.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 7:00 மணி முதல் 1:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91-4285-222 010, 222 080.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* 📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : இக்கோயிலில் யோக ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது வால், இரண்டு காலுக்கும் நடுவே கீழே இருக்கிறது. வாலில் மணியும் உள்ளது. பொதுவாக ஆஞ்சநேயரின் திருவடி, வால் தரிசனம் விசேஷம் என்பர். இங்கு இவ்விரண்டையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது சிறப்பு.* *பொது தகவல் : ஆதிநாராயணர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறார். உற்சவர் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியிருக்கிறார். அமாவாசைகளில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஆதிநாராயணரின் கோஷ்டச்சுவரில் வேணுகோபாலர், நாராயணர், வெங்கடாஜலபதி, நரசிம்மர், குருவாயூரப்பன் என திருமாலின் திருவுருவங்கள் உள்ளன. பிரகாரத்தில் நம்மாழ்வார், ராமானுஜர், திருமங்கையாழ்வார் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். சுவாமி, வெள்ளி கருடாழ்வார் மீது விசேஷ நாட்களில் மட்டும் உலா வருகிறார்.* *பிரார்த்தனை : இங்கு அனைத்து பிரார்த்தனைகள் நிறைவேறவும் வேண்டிக்கொள்கிறார்கள்.* *நேர்த்திக்கடன் : சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யலாம்.* *தலபெருமை : முன்மண்டபத்தில் சஞ்சீவி ஆஞ்சநேயர் மற்றும் வீர ஆஞ்சநேயர் இருவரும் அருகருகில் இருந்து அருளுகின்றனர். சஞ்சீவி ஆஞ்சநேயர் கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடி, தன் வலதுகாலை மட்டும் சற்று முன்னே தள்ளி வைத்து புறப்படும் கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு ஆஞ்சநேயரின் மூன்று கோலங்களையும் தரிசனம் செய்யலாம் என்பது விசேஷம்.* *தல வரலாறு : விவசாயத்தில் செழித்து திகழும் இப்பகுதியில், முன்னொருகாலத்தில் நாட்டில் மழை பொழியாமல் பஞ்சம் ஏற்பட்டது. இதனால், மக்கள் மழை வேண்டி இவ்விடத்தில் சிறிய பெருமாள் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அதன்பின் மழை பொழிந்து மக்களின் பஞ்சம் நீங்கியது. பின் மக்கள் இவ்விடத்தில் பெரிய அளவில் கோயில் கட்டி வழிபாட்டிற்கு கொண்டு வந்தனர்.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் பவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி.* *சிறப்பம்சம் : இக்கோயிலில் யோக ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது வால், இரண்டு காலுக்கும் நடுவே கீழே இருக்கிறது. வாலில் மணியும் உள்ளது. பொதுவாக ஆஞ்சநேயரின் திருவடி, வால் தரிசனம் விசேஷம் என்பர். இங்கு இவ்விரண்டையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது சிறப்பு.* *இருப்பிடம் : ஈரோட்டில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் கோபி சென்று அங்கிருந்து 5 கி.மீ., தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். பஸ்வசதி உண்டு.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : ஈரோடு.* *அருகிலுள்ள விமான நிலையம் : கோவை.* *தங்கும் வசதி : ஈரோடு.*
16 likes
1 comment 16 shares
saravanan.
1K views 1 months ago
*(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam) #irav vanakkam அருள்மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில்,* *காலடி தேவஸ்தானம்,* *மூலவர் : காலடியப்பன் (ஸ்ரீ கண்ணன்).* *தல விருட்சம் : பவளமல்லி.* *தீர்த்தம் : பூர்ணாநதி.* *புராண பெயர் : சசலம்.* *ஊர் : காலடி-638574.* *மாவட்டம் : எர்ணாகுளம்.* *மாநிலம் : கேரளா.* *காலை 5:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91-93888 62321.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* 📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : இந்துக்களின் புனித பூமியான இங்கு இந்துக்கள் அனைவரும் சென்று தரிசிக்க வேண்டும். இங்குள்ள கண்ணன் விக்ரகம் 3.5 அடி உயரத்தில் "அஞ்சனா' எனும் கல்லால் ஆனது. இந்தக்கல்லில் இரும்பு, தாமிரம் அதிக அளவில் கலந்திருப்பதால் இதற்கு சக்தி அதிகம். பெருமாள் தலங்களிலேயே குருவாயூரில் உள்ள கண்ணன் சிலையும். இங்கும் மட்டுமே "அஞ்சனா' கல்லில் ஆன விக்ரகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.* *பொது தகவல் : கண்ணனின் வலது பக்கம் சிவன், பார்வதி, கணபதி அருள்பாலிக் கின்றனர். நமஸ்கார மண்டபத்தில் பரசுராமர், ஆதிசங்கரர் இருவரது சன்னதிகள் உள்ளன. இங்கு தொடர்ந்து தீபம் எரிந்து கொண்டிருக்கிறது. சுற்றுப்பகுதியில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார்.* *பிரார்த்தனை : குழந்தைபாக்கியம் வேண்டுபவர்கள் நமஸ்கார மண்டபம் அருகே நின்று கண்ணனை வேண்டிக்கொள்கிறார்கள். இங்குள்ள சின்னக்கண்ணனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.* *கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தைபாக்கியம் வேண்டுபவர்கள், வியாபார விருத்தி, கல்வி, நடனத்தில் மேன்மை அடைய விரும்புபவர்கள் இங்கு நடக்கும் நவதானிய பூஜையில் கலந்து கொள்வார்கள்.* *நேர்த்திக்கடன் : பிரார்த்தனை நிறைவேறியவுடன் குழந்தையுடன் வந்து தொட்டில் கட்டுகிறார்கள். அத்துடன் குழந்தையை சன்னதி படிக்கட்டில் வைத்து காணிக்கை செலுத்தி எடுத்து செல்கிறார்கள்.* *தலபெருமை : தர்மத்தையும் நீதியையும் விட கருணையே பெரியது என நிலைநாட்டியவர் ஆதிசங்கரர். இவரது குலதெய்வம்தான் கேரள மாநிலம் காலடியில் வீற்றிருக்கும் "திருக்காலடியப்பன். கண்ணபரமாத்மா தான் திருக்காலடியப்பனாக இங்கு அருள்பாலிக்கிறார். தீவினைகளை கருணையால் மாய்த்த ஆதிசங்கரர் உலகுக்கே உபதேசம் செய்து "ஜகத்குரு ஆனார். அவரது குலதெய்வமான திருக்காலடியப்பன் இத்தலத்தில் உன்னி கிருஷ்ணனாக (சின்னக் கண்ணன்) அருள்பாலிக்கிறார். இங்குள்ள கண்ணன் விக்ரகம் 3.5 அடி உயரத்தில் "அஞ்சனா' எனும் கல்லால் ஆனது. இந்தக்கல்லில் இரும்பு, தாமிரம் அதிக அளவில் கலந்திருப்பதால் இதற்கு சக்தி அதிகம். பெருமாள் தலங்களிலேயே குருவாயூரில் உள்ள கண்ணன் சிலையும், இங்கும் மட்டுமே "அஞ்சனா கல்லில் ஆன விக்ரகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.* *கோயில் அமைப்பு மூலவரான திருக்காலடியப்பன் வலது கையில் வெண்ணெய் வைத்துள்ளார். இடதுகை இடுப்பில் இருக்கிறது. வலது மேல்கையில் சக்கரம், இடது மேல்கையில் சங்கு வைத்திருக்கிறார். பெருமாள் கோயில்களில் கண்ணனின் அருகில் சிவ, பார்வதி அருள்பாலிப்பது இங்கு மட்டும் தான் என்கின்றனர். இதன் அருகே தலவிருட்சமான பவளமல்லி உள்ளது. நுழைவு வாயில் முழுவதும் பித்தளை தகடு பதிக்கப்பட்டுள்ளது. இதில் குழலூதும் கண்ணனும், அமர்ந்த நிலையில் ஆதிசங்கரரும் அருளுகின்றனர். கோயிலின் எதிரில் சங்கரரின் தாய் ஆரியாம்பாள் சமாதி உள்ளது.* *ஒரு அட்சய திரிதியை நாளில் தான் மகாலட்சுமி இங்கு தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தாள். அதன் காரணமாக ஆண்டு தோறும் அட்சய திரிதியை நாளில் இங்கு கனகதாரா யாகம் சிறப்பாக நடக்கிறது. சங்கரர் வாழ்ந்த 32 ஆண்டை நினைவுபடுத்தும் வகையில் 32 நம்பூதிரிகள் இந்த யாகத்தை நடத்துகின்றனர். யாகத்தின் முடிவில் பணம் செலுத்தியவர்களுக்கு பிரசாதமாக தங்கநெல்லிக்கனியும், வெள்ளி நெல்லிக்கனியும், யந்திரமும் வழங்குகிறார்கள்.ஐயப்பன் சன்னிதானத்தின் முன்னால் "தத்வமஸி' என்று எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்பது இதன் பொருள்.தத்வமஸி கொள்கையை அத்வைதமாக உலகிற்கு வழங்கியவர் ஆதிசங்கரர். அவர் அவதரித்த காலடி தலத்தையும், அங்குள்ள திருக்காலடியப்பன் கோயிலையும் ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும்.* *தல வரலாறு : இவர் சிவனின் அம்சமாக அவதரித்தவர். கேரள மாநிலம் காலடியில் வசித்து வந்த சிவகுரு-ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு வெகு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது இவர்கள் திருச்சூர் வடக்குநாதரிடம் குழந்தை வேண்டி வழிபட்டனர். சிவனின் கருணையால் கி.பி. 788ல் இந்த தம்பதியினருக்கு ஆதிசங்கரர் அவதரித்தார். சங்கரரின் 3வது வயதில் அவரது தந்தை காலமானார் உறவினர்கள் உதவியுடன் சங்கரர் 5 வயதிற்குள் சாஸ்திரங்களை பயின்றார்.7 வயதிற்குள் வேதங்களை பயின்ற சங்கரர். திருமணம் செய்யாமல், தன் தாய்க்கு பணிவிடை செய்து வந்தார். பின்னர் தாயின் அனுமதியை சமயோசிதமாகப் பெற்று, துறவு மேற்கொண்டார்.* *பொன் மழை : சங்கரர் தனது குருகுல வாசத்தின் போது தினமும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்ப்பணித்த பிறகு, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த சங்கரர், மறுநாள் துவாதசி திதியில் பிட்சை கேட்டு, அயாசகன் என்ற ஏழை வீட்டு வாசலில் நின்று "பவதி பிட்சாம்ம் தேஹி' என்றார். வெளியே வந்த பெண்மணியிடம் உணவேதும் இல்லை. ஆயினும், தன்னிடம் உணவு கேட்டு வந்த பாலகனை வெறும் கையுடன் அனுப்ப மனமில்லாமல், காய்ந்து போன நெல்லிக்கனியை தானமாக வழங்கினாள். சங்கரரின் கண்கள் குளமாகின. பிஞ்சு பாலகனின் நெஞ்சை உலுக்கிய இந்த செயல் உணர்ச்சி பிழம்பாக உருவெடுத்தது. உடனே சங்கரர், அந்த பெண்ணின் வறுமையை போக்க நினைத்து, தன் குலதெய்வம் மகாவிஷ்ணுவின் மனைவி மகாலட்சுமியை குறித்து ஸ்தோத்திரம் பாடி துதித்தார். 19வது ஸ்தோத்திரம் பாடி முடித்தபோது, மகாலட்சுமியின் கருணையால் ஏழை பெண்மணி வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது. அதுவே "கனகதாரா ஸ்தோத்திரம்' என பெயர் பெற்றது.* *காலடி- பெயர்க்காரணம்: சங்கரரின் தாய் தினமும் நீண்ட தூரம் நடந்துசென்று பெரியாறு ஆற்றில் குளித்து அங்கிருந்த கண்ணனை தரிசனம் செய்து வந்தார். வயதாகிவிட்டதால், அவரால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை. ஆனால், பெரியாற்றில் குளிக் காமல் இருக்கவும் முடியவில்லை.அம்மாவின் நிலை குறித்து சங்கரருக்கு வருத்தம் உண்டானது. அவரது ஆசையை நிறைவேற்ற கண்ணனை பிரார்த்தனைசெய்தார். அப்போது அசரீரி தோன்றி, "குழந்தாய்! நீ உனது காலால் அடி வைக்கும் இடத்தில் பெரியாறு உன்னைத்தேடி வரும், என ஒலித்தது. என்ன ஆச்சரியம்? சங்கரர் காலால் அடி வைத்த உடனேயே ஆறு ஊருக்குள் புகுந்தது. அப்பழுக்கற்ற பெரியாறு நதி சங்கரரின் தாய் இருக்கும் இடம் தேடி ஓடி வந்தது. அதுவரை சசலம்' என்ற பெயருடன் விளங்கிய கிராமம், இந்த நிகழ்ச்சிக்கு பின் "காலடி' என பெயர் பெற்றது.தன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றிய தன் குலதெய்வத்திற்காக, கி.பி 795ல் தானே வரு கோயில் கட்டி அதில் திருக்காலடியப்பனை பிரதிஷ்டை செய்தார் சங்கரர். புதிய வழியில் ஓட ஆரம்பித்த பெரியாறு "பூர்ணா' என பெயர் பெற்றது.இதில் தான் முதன் முதலில் திருக்காலடியப்பனுக்கு ஆறாட்டு விழா நடந்தது. அன்று முதல் சங்கரரின் தாய் இங்கேயே குளித்து கண்ணனை வணங்கினார்.* *முதலைக்கு முக்தி : ஒருநாள் சங்கரர் பூர்ணா நதியில் குளித்துக்கொண்டிருந்தார். அவரது தாய் கரையில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு முதலை சங்கரரின் காலை கவ்வியது. தாயின் கண்முன்னே இந்த சம்பவம் நடந்ததும் அலறிவிட்டார். கிராமமே திரண்டது. கொஞ்சம் கொஞ்சமாக முதலையின் வாய்க்குள் சங்கரரின் உடல் செல்ல தொடங்கியது.என்ன நடக்க போகிறது என்பதை அறிந்தார் சங்கரர். சந்நியாசம் வாங்கினால் தான் முதலை விடும். இல்லாவிட்டால் விழுங்கிவிடும் என்பதை தாயிடம் கூறினார். மகன் உயிர்பிழைத்தால் போதும் என்பதால் சந்நியாசத்திற்கு அனுமதி அளித்தார். உடனே முதலை சங்கரரை விடுவித்தது. முன்காலத்தில் துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான ஒரு கந்தர்வனே முதலையாக மாறி அந்த ஆற்றில் கிடந்தான். ஆதிசங்கரரின் ஸ்பரிசம் கிடைத்ததும், சாபவிமோசனம் பெற்றான். இந்த ஆற்றில் குளித்து கண்ணனை வணங்கினால் சகல பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கை.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : அட்சய திரிதியை, ஆண்டு தோறும் கண்ணன் பிரதிஷ்டை திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழாவின்போது, தினமும் அபிஷேகம், கலசாபிஷேகம், நவதானிய பூஜை நடக்கும். திருவோணம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, மகரசங்கராந்தி ஆகிய விழாக்களும் கொண்டாடப்படுகிறது. வியாழக்கிழமை இங்கு விசேஷ நாள்.* *சிறப்பம்சம் : இங்குள்ள கண்ணன் விக்ரகம் 3.5 அடி உயரத்தில் "அஞ்சனா' எனும் கல்லால் ஆனது. இந்தக்கல்லில் இரும்பு, தாமிரம் அதிக அளவில் கலந்திருப்பதால் இதற்கு சக்தி அதிகம். பெருமாள் தலங்களிலேயே குருவாயூரில் உள்ள கண்ணன் சிலையும், இங்கும் மட்டுமே "அஞ்சனா' கல்லில் ஆன விக்ரகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.* *இருப்பிடம் : எர்ணாகுளத்திலிருந்து (35 கி.மீ.) திருச்சூர் செல்லும் வழியில் அங்கமாலி என்ற இடத்திலிருந்து தெற்கே 8 கி.மீ. தூரத்தில் காலடி உள்ளது. இத்தலத்தை "கிருஷ்ணன் அம்பலம்' என்றால் தான் தெரியும். சென்னையிலிருந்து எர்ணாகுளம், திருவனந்தபுரம் செல்லும் அனைத்து ரயில்களும் அங்கமாலி வழியாகச் செல்லும் மதுரையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயிலும் அங்கமாலி வழியாகச் செல்லும்.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : அங்கமாலி.* *அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சி.* *தங்கும் வசதி : எர்ணாகுளத்தில் உள்ள விடுதிகளில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.*
17 likes
12 shares
saravanan.
16K views 2 months ago
*(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam) #irav vanakkam அருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில்,* *மூலவர் : சென்றாயப்பெருமாள்.* *உற்சவர் : சென்றாயப்பெருமாள்.* *அம்மன்/தாயார் : ருக்மிணி, சத்யபாமா.* *தல விருட்சம் : உசிலை மரம்.* *தீர்த்தம் : கிருஷ்ணர் தெப்பம்.* *ஊர் : கோட்டைப்பட்டி,பழைய வத்தலக்குண்டு.* *மாவட்டம் : திண்டுக்கல்.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் திறந்திருக்கும்.* *+91 98658 26387.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* 📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியுடன் காட்சியளிப்பதும், இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருப்பதும் வித்தியாசமான அமைப்பு. இவரிடம் சங்கு, சக்கரம் கிடையாது.* *பொது தகவல் : கிருஷ்ண மேடை : 500 படிகளுடன் அமைந்த மலை மீது, மண்டல காலத்தை உணர்த்தும் விதமாக 48 தூண்களுடன் அமைந்த கோயில் இது. கோயில் கொடிமரத்தில் தல வரலாற்றை புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர். சென்றாயர் சன்னதிக்கு வலப்புறம், சுவாமி பசுவிடம் பால் குடித்த இடத்தில் சித்திர ரத மண்டபத்தில், ஒரு மேடை உள்ளது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இந்த மேடையின் இரு மூலைகளில் தங்கள் கைகளை வைத்து வழிபடுகின்றனர். சற்று நேரத்தில் அவர்களது இரு கைகளும் ஒன்றாக கூடிவிடும். இதை, அச்செயல் நடக்க சுவாமி தரும் உத்தரவாகவே கருதுகின்றனர்.* *பிரார்த்தனை : விவசாயம் செழிக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க சென்றாயப் பெருமாளிடம் வேண்டிக் கொள்கின்றனர்.* *நேர்த்திக்கடன் : சென்றாயருக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். இவர் கிருஷ்ணர் அம்சம் என்பதால் அதிகளவில் முறுக்கு, சீடை, அதிரசம் படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.* *தலபெருமை : வித்தியாசமான சுவாமி: சிறுவனாக வந்ததன் அடிப்படையில் பிரதான சன்னதியிலுள்ள சென்றாயப் பெருமாளை, பாலகராகவே வழிபடுகின்றனர். எனவே, உடன் தாயார்கள் கிடையாது. ஆனாலும் இவர் முறுக்கு மீசை, தாடியுடன் காட்சியளிப்பதும், இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருப்பதும் வித்தியாசமான அமைப்பு. இவரிடம் சங்கு, சக்கரம் கிடையாது. உற்சவர் ருக்மிணி, சத்யபாமாவுடன் காட்சி தருகிறார். சனிக்கிழமைகளில் இங்கு கிருஷ்ணலீலை, ராமாவாதாரம் பற்றிய பஜனைப் பாடல்கள் பாடுவர். ஓணம் பண்டிகையன்று இவருக்கு மூன்று நாள் யாகசாலையுடன் விசேஷ பூஜைகள் உண்டு. அன்று, ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கு அணிவித்த மாலையைக் கொண்டு வந்து சுவாமிக்கு அணிவிப்பர்.* *விசேஷ திருவிழா: ஒரு வருடம் விட்டு மறு வருடம், பங்குனி மாதத்தில் இங்கு மூன்று நாள் விழா நடக்கிறது. பங்குனி நான்காம் வெள்ளியன்று இரவில் சென்றாயர், மலையில் இருந்து கீழே செல்வார். அங்கு அவருக்கு விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கும். இந்த மூன்று நாட்களும் தேவராட்டம் பிரதான இடம் பிடிக்கும். சிவன், பிரம்மாவின் தலையை கிள்ளியபோது, அது சிவன் கையிலேயே ஓட்டிக் கொண்டது. தலையை விடுவிக்க சிவன், இந்திரலோகம் சென்றார். அப்போது, பெருமாள் பாவாடை, சட்டை, கழுத்தில் பாசி அணிந்து. முகத்தில் தாடியுடன், கையில் ஒரு மேளத்தை வைத்துக் கொண்டு கோமாளி வேடத்தில் இந்திரசபைக்குச் சென்றார் அங்கு அவர்கள் சிரிக்கும்படியாக நடனமாடினார். சிவன் கையில் இருந்த பிரம்மாவின் தலை சிரிக்கவே, கீழே விழுந்துவிட்டது. இவ்வாறு, பெருமாள் ஆடிய நடனமே தேவராட்டம் என்கின்றனர். இதனடிப்படையில், தேவராட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடக்கும். இவ்வேளையில் சுவாமி முன் தேவராட்டம் ஆடும்போது, சிலையும் ஆடுவதாகச் சொல்கின்றனர். சனிக்கிழமையன்று ருக்மிணி, சத்யபாமாவுடன் திருக்கல்யாணம் நடக்கும் அப்போது, பெண்கள் நலுங்குப்பாட்டு படிப்பர். விழாவின் கடைசி நாளில், பக்தைகள் சட்டையின்றி, வெண்புடவை மட்டும் அணிந்து மஞ்சள் நீரை சுவாமி மீது தெளித்து விளையாடுவர். கோபிகைப் பெண்கள் கிருஷ்ணருடன் விளையாடியது போன்ற பாவனையில் இந்த வைபவம் நடக்கும்.* *சுவாமி உணர்த்தும் தத்துவம் : மனிதர்கள் வாழும் காலத்தில் எவ்வளவு செல்வாக்குடனும், வசதியாகவும், ஆடம்பரமாகவும் இருந்தாலும், வாழ்க்கைக்குப் பின் அவர்கள் கொண்டு செல்வது ஏதுமில்லை. இதை உணர்த்தும் விதமாக பங்குனி விழாவில் கடைசி நாள் வைபவம் நடக்கும். அப்போது, சுவாமியை ஒரு குடிசையில் எழுந்தருளச் செய்து, அனைத்து ஆபரணங்களையும் களைந்து விடுவர். அவர் மீது ஒரு காவியுடையை மட்டும் அணிவிப்பர். அதனுடனேயே, அவர் சன்னதிக்குச் சென்று விடுவார்.* *கிருஷ்ண ஜெயந்தி விழா : கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இங்கு விசேஷ பூஜை உண்டு. அப்போது, கிருஷ்ணரை தொட்டிலில் கிடத்தி அவருக்கு சேனை (நாக்கில் தேன் வைத்தல்) வைக்கும் சடங்கும் நடக்கும். பெண்கள் பிரசவமான பெண்களுக்கு தருவதுபோல, வெள்ளைப்பூண்டு, கருப்பட்டி, பெருங்காயம் சேர்த்த மருந்துப் பொருளை இடித்து, சுவாமி சன்னதியில் படைப்பர். மேலும், கிருஷ்ணருக்குப் பிடித்த சீடை, முறுக்கு, அதிரசம், மிட்டாய் உட்பட பல வகையான பதார்த்தங்களையும் படைத்து வழிபடுவர். கிருஷ்ணர் பிறந்ததைக் கொண்டாடும்விதமாக பெண்கள் கிட்டி பந்து என்னும் விளையாட்டையும் ஆடி மகிழ்வர்.* *தல வரலாறு : கிருஷ்ண தேவராயர் வம்சாவளியைச் சேர்ந்த ஆதிசென்னம்ம நாயக்கர், என்ற பெருமாள் பக்தர் இவ்வூரில் வசித்து வந்தார். இங்குள்ள குன்றில் பசுக்களை மேய்ப்பது அவரது வழக்கம். ஒருசமயம் பசு மேய்த்துவிட்டு, மாலையில் வீடு திரும்பியபோது ஒரு பசு மட்டும் இல்லாதைக் கண்டார். எனவே, பசுவைத்தேடி குன்றுக்கு வந்தார். ஓரிடத்தில் அந்த பசு நின்றிருக்க, அதன் மடியில் சிறுவன் ஒருவன் பால் பருகிக் கொண்டிருந்ததைக் கண்டார். குட்டி போடாத பசுவிடம் சிறுவன் பால்குடிப்பதைக் கண்டவருக்கோ ஆச்சர்யம். இது இறைசெயலாகவே இருக்க வேண்டுமெனக் கருதியவர் மறைவாக நின்று கொண்டார். அப்போது சிறுவன் அவரை அழைத்து பெருமாளாக சுயரூபம் காட்டினார். அவரிடம், தான் அந்த குன்றில் இருக்க விரும்புவதாகவும், அங்கு தனக்கு கோயில் எழுப்பும்படியும் உத்தரவிட்டார். அதன்படி, பக்தர் இங்கு அவருக்கு கோயில் எழுப்பினார். பக்தர்களுக்கு ஓடிச் சென்று அருள்புரிபவர் என்பதால் சுவாமிக்கு "சென்றாயப்பெருமாள்' என்ற திருநாமம் அமைந்தது.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : வைகுண்ட ஏகாதசியன்று சிறப்பு பூஜை, ஓணம், புரட்டாசி சனிக்கிழமைகள்.* *சிறப்பம்சம் : மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியுடன் காட்சியளிப்பதும், இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருப்பதும் வித்தியாசமான அமைப்பு. இவரிடம் சங்கு, சக்கரம் கிடையாது.* *இருப்பிடம் : திண்டுக்கல்லில் இருந்து (35 கி.மீ.,) வத்தலக்குண்டு சென்று, அங்கிருந்து 3 கி.மீ., சென்றால் இவ்வூரை அடையலாம். குறித்த நேரத்தில் மட்டும் இவ்வூர் வழியே பஸ்கள் செல்கின்றன. தேனி ரோட்டில் பழைய வத்தலக்குண்டு பிரிவில் இறங்கி, அங்கிருந்து ஒரு கி.மீ., நடந்தும் செல்லலாம். ஆட்டோ வசதி உண்டு.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : திண்டுக்கல்.* *அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை, திருச்சி.* *தங்கும் வசதி : திண்டுக்கல்.*
142 likes
101 shares