#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏
இந்திய விடுதலைப் போராட்ட தியாகி, மாவீரன் வாஞ்சிநாதன் அவர்களின் 114 வது ஆண்டு நினைவு நாள் இன்று. தனது இளம் வயதிலேயே விடுதலை கனல் ஏந்தி, நாட்டின் விடுதலைக்காக தன்னுயிரை தியாகம் செய்த இந்த தியாகியை இந்நாளில் நினைவுகூறுவோம்.
ஆங்கிலேய ஆட்சியின் சர்வாதிகாரப் போக்கு, கொடுமைகளுக்கு எதிராக மணியாச்சி ரயில் நிலையத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ராபர்ட் ஆஷ் என்பவரைச் சுட்டுக் கொன்று, ஆங்கிலேயரிடம் பிடிபடக் கூடாது என்பதற்காகத் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு வீர மரணம் அடைந்த சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் வாஞ்சிநாதன் அவர்களின் நினைவு தினத்தில் அவருக்கு நம் மரியாதையைச் செலுத்துவோம்.
தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரையே அர்ப்பணித்த அவரது வீரமும் தியாகமும் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும்.