கோவில் ஆன்மிக சிந்தனைகள்

3K Posts • 604K views
#கோவில் ஆன்மிக சிந்தனைகள் #ருத்ர ஆன்மிக தகவல்கள் #🕉️லிங்கா ஸ்ரீ ஆன்மிக தகவல்கள்🕉️ #ஆன்மிக தகவல்கள் & சிறப்பு பூஜைகள்🕉️ #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 நற்பவி என்றால் மிக உயர்ந்த மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தை அருளியது காகபுஜண்ட மகரிஷி. பண்டைய நூல்களில் இந்த மந்திரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால் இது ஒரு மோகன மந்திரம் ஆகும்! நற்பவி!! நற்பவி!! நற்பவி!! என்று சொல்லிக்கொண்டே இருக்க உங்கள் கஷ்டங்கள் மட்டுமல்லாது உலக மக்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. நற்பவி என்றால் நல்லது உண்டாகட்டும் நல்லது நடக்கட்டும் என அர்த்தம் ஆகும். புருவ மத்திக்கும் மேலே உள்ள ஏழு திரைகளை தாண்டி அழியா பேரின்ப நிலையை அடைய “நற்பவி”பேருதவியாக இருக்கும் என மகிரிஷி காக புஜண்டர் அருளுகின்றார். இதை எப்ப வேண்டுமானாலும் சொல்லலாம் ,கணக்கு கிடையாது ஆனால் மனம் சலனமடையாமல் ஒருமுகமாக கூற வேண்டும். இந்த மந்திரம் ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்க்கு இணையானது என்பதால் இதை எல்லோரும் கார், வீடுகளில் எழுதி வைத்து பயன்பெற்று கொள்ளலாம். இதை உச்சரிப்பவர்களுடைய சொந்த கஷ்டங்கள் மட்டுமின்றி உலக மக்களுடைய கஷ்டங்களும் உடனடியாக விலகி எங்கெங்கும் எவ்வெவர்க்கும் நன்மையே உண்டாகும் என்பது கருணைமலை காகபுஜண்டர் வாக்கு ஆகும்.
12 likes
21 shares
மண்டல பூஜையின் போது உடனடி முன்பதிவு எண்ணிக்கை இரண்டாயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தலா 5,000 பக்தர்கள் உடனடி பதிவு மூலம் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அசம்பாவிதத்தை தவிர்க்கும் பொருட்டு உடனடி பதிவு எண்ணிக்கையை தேவசம் போர்டு குறைத்துள்ளது. இதன்படி இரு நாட்களிலும் தலா 2,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் ஆன்லைன் மூலம் டிசம்பர் 26 ஆம் தேதி 30 ஆயிரம் பேரும், 27 ஆம் தேதி 35 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். #ஆன்மிக தகவல்கள் & சிறப்பு பூஜைகள்🕉️ #🕉️லிங்கா ஸ்ரீ ஆன்மிக தகவல்கள்🕉️ #ருத்ர ஆன்மிக தகவல்கள் #கோவில் ஆன்மிக சிந்தனைகள் #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏
11 likes
13 shares