🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏
374 Posts • 228K views
#முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #மாரி #அம்மன்* மதுரை அருகிலுள்ள சதுரகிரிமலையில் தவமிருந்த சித்தர் ஒருவர், அம்மனின் தரிசனம் வேண்டிதவமிருந்தார். அப்போது அசிரீரி ஒலித்து. சித்தரே ! அர்ச்சுனா நதி மற்றும் வைப்பாறுக்கிடையே உள்ள மேட்டுப்பகுதிக்கு வா” என்றது. அங்கே சென்ற சித்தருக்கு அம்பாள் காட்சிதந்தாள். தான் பார்த்தவடிவத்தை அவர் சிலையாகப் பிரதிஷ்டை செய்தார். பிற்காலத்தில் இந்த சிலை, ஆற்று மண்ணில் புதைந்து போனது. பிற்காலத்தில், இப்பகுதியில் வசித்த சிறுமிபசுஞ்சாணம் சேகரிக்கும் சேகரித்து வந்தாள் ஒரு நாள் தரையில் வைத்த சாணக்கூடையை தூக்க முடியவில்லை. பொரியோரை அழைத்துவந்தாள் அப்போது, அந்த சிறுமியின் மூலமாக வெளிப்பட்ட மாரியம்மன். அவ்விடத்தில் தனது சிலை வடிவம் இருப்பதாகக் கூறினாள். அதன்படி அங்கு கிடைத்த சிலையை, பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர். மாரியின் கோயிலுக்கு வடக்கே ஓடும் அர்ச்சுனா நதியானது ,வத்திராயிருப்பிலுள்ள மகாலிங்கமலையில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அர்ச்சுனா நதிக்கு ஒரு புராணக்கதை உண்டு. முன்னொரு காலத்தில் பஞ்சபாண்டவர்கள் காடுகளில் சுற்றித்திரிந்து பின் இந்த மலையடிவாரத்திற்கு வந்து குளிக்க நினைத்தார்கள். ஆனால், அவர்கள் குளிப்பதற்குரிய இடம் இல்லாததால் அர்ச்சுனன் கங்கா தேவியை வணங்கி, தன் அம்பால் புமியை பிளந்தான். அந்த பிளவிலிருந்து தோன்றிய அதான் அர்ச்சுனா ஆறு எனப்பட்டது. இந்த ஆற்றுநீரில் பஞ்சபாண்டவர்கள் திரவுபதியுடன் தீராடிமகிழ்ந்தனர். அம்மன் கோயிலுக்கு தெற்கே ஓடுவது வைப்பாறு எனப்படும். இந்த வைப்பாற்றுக்கும் ஒரு தனிபுராணக்கதை உண்டு. ஒரு சமயம் பொதிகை மலையின் அடிவாரத்தில் சிவசைலத்துக்கு வடக்கே சம்புகண் என்ற வேடன்தீயின் நடுவிலிருந்து கடும் தவம் புரிந்தான். இவனது தவத்தில் அயோத்தியில் ஒருவன் இறந்தான். அப்போது அயோத்தியை ஆண்டராமன் இந்த இறப்பை கேள்விப்பட்டு, தன் சேனைகளுடன் கிளம்பி சம்புகனை கொன்றார். அத்துடன் தன் நாட்டில் இறந்தவனையும் உயிர்ப்பித்தார். (இது ராமயாண உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது).தவம் செய்த சம்புகனை கொன்ற பாவத்தால் பீடிக்கப் பெற்ற ராமன் பாவவிமோசனத்திற்காக சிவமலையில் சிவபெருமானை நினைத்து, வணங்கித்தவம் செய்துபாவவிமோசனம் பெற்றார். அதன் பின் ராமன் தன் பரிவாரத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வந்து சேர்ந்தார். இங்கு வந்து ராமன், தன் மாலைக்கடனை முடிக்க தண்ணீர் தேடிகிடைக்காததால் வருத்தினார். அப்போது ராமனுடன் வந்த சாம்பவன் என்பவன். உலகிலுள்ள புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே குடத்தில் நிரப்பி, அந்தக்குடத்தை அகத்தியர் இங்கு புதைத்துவைத்திருப்பதாக கூறினான்.இதைக்கேட்டு மகிழ்ந்த ராமன் தன் அம்பால் புதைத்து வைத்திருந்த குடத்தை உடைத்தார். இப்படி வைப்பி (புதையலில்)லிருந்து தோன்றிய ஆறுதான் வைப்பாறு எனப்பட்டது. இந்த வைப்பாறு கரிவலம் வந்தநல்லூர், சாத்தூர், கொல்லாம்பட்டி வழியாக பாய்ந்து இருக்கன்குடி அடைந்தது. அங்கு ஏற்கெனவே ஓடிக்கொண்டிருக்கும் அர்ச்சுனாநதியுடன் கலந்து முத்துலாபுரம், விளாத்திகுளம் வழியாக சென்று கடலில் கலக்கிறது. *இரட்டை தீர்த்தம்* : வனவாசம் சென்ற அருச்சுனன் தன் தாகம் தீர, மேற்கு மலைத்தொடர்ச்சி மலைமீது பாணம் எய்தான். அதிலிருந்து பொங்கிய நீர், நதியாக பெருக்கெடுத்தது, இந்நதிஅவனது யெராலேயே அழைக்கப்பெற்றது, இதேபோல், இலங்கை சென்ற ராமபிரான், பூவைக்காக அந்த மலை மீது அம்பெய்தார். அப்போது பிறந்த நதிவைப்பாறு எனப்பட்டது. இவ்விருநதிகளும் கங்கைக்கு ஓப்பானது என்பதால், இரு கங்கைக்கும் நடுவில் அமைந்தகோயில் என்பதை உணர்த்தும் விதமாக ‘இருகங்கைக்குடி’ எனப்பட்ட ஊர் ‘இருக்க (ங்)ன்குடி’ என மருவியது. பக்தர்கள் இரண்டு தீர்த்தங்களிலும் நீராடி அம்பிகையை வழிபட்டு வரலாம். *ஆதி அம்பிகை* : அம்பாள், இங்கு சிவஅம்சமாக இருப்பதால், சன்னதி எதிரே நந்தி இருக்கிறது. தினமும் அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கும் போது திரைபோடப்பட்டுவிடும். ஆனால், பவுர்ணமியன்று நடக்கும் அபிசேகத்தைப் பக்தர்கள் காணலாம். கோயிலில் இருந்து சற்று தூரத்தில் அம்பாள் கிடைத்த இடத்தில், ஆதி அம்பாள் சன்னதி உள்ளது. இங்கு அம்பாள் உருவம் பொறித்தசூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் உற்சவ அம்பிகைக்கு கோயில் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவள் பிரதான கோயிலுக்குள் வருவாள். குழந்தை இல்லாதவர்கள் அம்பாளுக்கு கரும்புத்தொட்டில் கட்டுவதாக வேண்டுகின்றனர். கரும்பில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து சன்னதியைவலம் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அக்னிச்சட்டி, அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர் வயிற்று வலி தீர மபவிளக்கு தீபமேற்றுகின்றனர். இதற்காக தனி மண்டபம் உள்ளது. பிரகாரத்தில் வடக்குவாசல் செல்வி, வெயிலுகந்தம்மன், வீரபத்திரர், பைரவர், காத்தவராயர், பேச்சியம்மன், முப்பிடாதி உள்ளனர். பக்தர்களின் குறை தீர்க்கும் பிரதான பிராத்தனைத் தலம் இது. கண் நோய் உள்ளவர்கள், ‘வயனம் இருந்தல்” என்ற விரதத்தை அனுசரிக்கின்றனர். ஒரு சிலர் நோய் தீரும் வரை இங்கேயே இருந்து விடுகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து தங்கிவிட்டு மறுநாள் செல்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு கோயிலில் மண்டபம் உள்ளது, இவர்கள் அம்பாளின் அபிஷேக தீர்த்தத்தைக் கண்ணில் விட்டுக்கொள்ள, நோய் நிவர்த்தியாக நம்பிக்கை. விவசாயிகள் இந்த தீர்த்தத்தை நிலத்தில் தெளிக்கின்றனர். அறுவடையானதும் அம்பிகைக்கு நவதானியம், நெல், காய்கறி காணிக்கை கொடுக்கின்றனர். கால்நடைகள் நோயின்றி இருக்கவும் இத்தீர்த்தம் கொடுப்பதுண்டு. அம்மைநோய் உள்ளவர்கள், அம்பிகைக்கு ஆமணக்கு விதையைக் காணிக்கையாக்கி வழிபடுகின்றனர். அம்பாளுக்கு உருவ காணிக்கை, கண்மலர் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பொதுவாக அம்மன் இடது காலைமடித்து வலது காலை தொங்கவிட்டபடி இருக்கும். ஆனால் இந்த அம்மனோ, இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும், அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது, என்பதற்கேற்ப வலது காலைமடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கிறார். இந்த அமைப்பே இருக்கன்குடி மாரியின்மிகப்பெரிய சிறப்பு.
10 likes
16 shares