#🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 14ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 12.08.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்:
------------
சத்தகன்னி மாரைத் தான்வருத்தி மாலையிட்டுக்
கலியாண மங்களங்கள் காட்சித் திருநாளும்
.
விளக்கம்:
==========
ஏழு கன்னிகளையும் நீ வரவழைத்து அவர்களுக்கு மாலை இட்டுத் திருமணம் செய்து, அக்காட்சியோடு திருநாள் நடத்து.
.
.
அகிலம்:
=========
சலியாமற் காசுத் தந்தவர்க ளுண்டானால்
வேண்டிநீ தர்மம் விரைவாய் நடத்தியிரு
.
விளக்கம்:
==========
அத்திருவிழாவிற்காக எந்தச் சோர்வுமின்றிப் பொருள் ஈந்தவர்கள் உண்டானால் அவர்களிடம் நீ தாராளமாகப் பெற்று கொண்டு அதற்குரிய தருமத்தினை விரைவாக நீ செய்.
.
.
அகிலம்:
=========
ஆண்டத் திருநாள் அதுமுடக்கம் வராமல்
பிச்சிவெள்ளை பச்சரிசி மிளகிலை தேங்காயும்
மிச்சம்பழஞ் சந்தனமும் மிகுபன்னீர் வாடைகளும்
மேற்கட்டி கட்டி மிகுவா யலங்கரித்து
மாற்கட்டுச் செய்து மகிழ்ச்சை டம்மானமிட்டு
.
விளக்கம்:
=========
ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்ற திருநாள்கள் எவ்வித முடக்கமுமின்ற நீ செய், பிச்சிப்பூ, வெள்ளைப் பச்சரிசி, மிளகு, இலை, தேங்காய், எலுமிச்சைப்பழம் சந்தனம், நல்ல பன்னீர், மணமான பொருள்கள் ஆகியவை வைத்துக் கோவிலின் மேலே அலங்காரக் கட்டுக் கட்டி அதிகமாக அலங்கரித்து அங்கே சிறு வீடு போன்று கட்டிப் பிணைத்து, மகிழ்ச்சியாக இடம்மான மேளம் இட்டு இப்படியே ஏழு நாள்களும் திருநாள் நடத்து.
.
.
அகிலம்:
========
இந்தப் படியாய் ஏழுநாளுந் திருநாள்
அந்தப் படிசெய்து அவனியி லாடிக்களித்து
எல்லா முறையும் இயல்பாகக் கொண்டாடி
.
விளக்கம்:
==========
இந்த வகையாகத் திருவிழா நடத்தி இவ்வுலகில் ஆடி மகிழ்ந்து எல்லா வகைகளையும் உன் மனதுக்குப் பிடித்த வகையாக்க் கொண்டாடு.
.
.
அகிலம்:
=========
நல்லாண்டு தேதி நல்லதிவ சம்பார்த்துத்
தெய்வகன்னி மாரைத் தெய்வச்சான் றோரிடமே
மெய்வரம் பான மனுமுறைபோல் தான்பேசிக்
கொடுக்கல்வாங் கல்முறையும் கூறி மிகக்கேட்டுத்
.
விளக்கம்:
=========
நல்ல ஆண்டு, தேதி, கிழமை ஆகியவற்றைக் கணித்துப் பார்த்து, அச்சமயத்தில் ஏழு தெய்வக்கன்னிகளையும் திருமணம் செய்வதற்காகச் செல்வ வளம் பொருந்திய சான்றோர் மூலமாக ஓர் உண்மையான எல்லைக்குள் மனித விதிகளுக்கு உட்பட்டு வரதட்சணை பேசி கொடுக்கல் வாங்கல்களை நியாயமாகப் பேசி கேட்டு வாங்கிக் கொள்.
.
.
அகிலம்:
=========
துடுக்கான நல்ல தோகைக்குண மும்பார்த்து
பார்த்துன் னருகில் பணிவிடைகள் செய்யுகின்ற
தோற்றுகின்ற சீசனுடத் தொல்முறை யும்பார்த்து
பரிய முறையும் பாவையர்கள் தம்முறையும்
சரியா யுலகோர் சங்கை யதுபோலே
தங்க நிறமானத் தர்மத் தலைவாநீ
மங்கள மதாக மாலையிடு என்மகனே
.
விளக்கம்:
==========
திறமையோடு அதிக கூந்தலையுடைய பெண்ணின் குண நலன்கள் எல்லாம் பார்த்துத் தெரிந்து கொள். பிறகு, உன் சீசர்களுடைய கருத்துக்களையும் அறிந்து அப்பெண்டிர்களின் உறவு, ஒழுக்கம் போன்ற முறைகளையும் அறிந்து கொள். தங்க நிறத்தையுடைய அறங்களுக்கு எல்லாம் தலைவனே, எந்தவிதச் சதியும் செய்யா மக்கள் கூடி வாழ்வதைப் போன்ற கூட்டத்தாரின் முன்னிலையில் நீ மங்களமாக அவர்களைத் திருமணம் செய்து மாலை இடு என் மகனே.
.
.
தொடரும்... அய்யா உண்டு.