ShareChat
click to see wallet page

கருவில் சுமக்கவில்லை!!!!! உம் நெஞ்சில் சுமந்தாயே!!!!! கலக்கத்தில் கண்டதில்லை உம்மை ஒருபோதும்!!!!! எம்மை கலக்கத்தில் விட்ட தில்லை ஒருபோதும்!!! தேம்பிய விழிகளை தேற்ற மறந்ததில்லை உம் சொற்கள்..... !!! துயர் துடைக்க பாடுபட்ட உம் கைகள் நேசத்தின் பெரும் கொடை!!!!! வாழ்க்கையை வாழ்ந்து வாழ்வின் வழி உணரச் செய்த தலைவன் நீர்!!!!! நேர்மையும், உண்மையும் உம்மொழிகள்!!!! கரைபடியாத கைகளே உம் அடையாளம்!!!!! மகள்களின் கனவிற்கு வண்ணம் தீட்டிய ஓவியன் நீர்!! மகள்களை வாழ்க்கையின் நீ(போரா)ரோட்டத்தில் செதுக்கிய சிற்பி நீர்!!!!! தோழனாக உரையாடிய உரையாடல்களில் தெரியும் உம் நேசத்தின் பெரும் சான்று!!!! அள்ளி அணைத்துக் கொண்ட உன் கரங்கள் உலகின் ஒட்டுமொத்த பிரியத்தின் ஒன்றிணைந்த வருடல்!!!!! ஆதரவாய் தேற்றிய உம்மொழி உலகையே வென்று எடுக்கக் கூடிய தன்னம்பிக்கைக்கான மாய மந்திரம்!!!!!!!!! "நான் இருக்கிறேன்" என்ற ஒற்றை வார்த்தையே வாழ்வின் பெரும் துயர் துடைக்கும் அருமருந்து!!!!! வேறு எவரிடத்தும் கிடைக்கா அருமருந்து அல்லவே என் முதல் நாயகனே!!!! என் தந்தையாகிய தாயுமானவனே!!! இங்ஙனம் சபி🥰🥰 வரிகளுக்கு சொந்தக்காரி💓 #👨அன்புள்ள அப்பா #👨‍👧‍👧அப்பா பொண்ணு💖 #அப்பா - மகள் பாசம் #💯அப்பா 💯 அம்மா #💝இதயத்தின் துடிப்பு நீ

21.8K ने देखा