ShareChat
click to see wallet page

சேலம் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் பயன்பாடற்று கிடக்கும் கடை வளாகத்தில் மாணவர்கள் கூட்டாக சேர்ந்து கஞ்சா புகைக்கும் காணொளி வெளியாகி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மாணவர்கள் கையில் கஞ்சா தங்குதடையின்றி புழங்குவது, அனைத்து வகையிலும் இந்த அரசு தோல்வியுற்றிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு. மக்கள் நலனில் ஸ்டாலின் அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பதற்கும் இதைவிடவும் வேறேதனும் சாட்சி வேண்டுமா? இந்த அரசு பொறுப்பேற்றது முதலே கஞ்சா போன்ற போதை பெருட்களின் நடமாட்டம் தங்குதடையின்றி நடப்பதை நாங்கள் பல்வேறு முறை எடுத்துரைத்தும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்காததன் விளைவுதான் இன்றைக்கு பள்ளி மாணவர்களிடத்தில் கூட போதை பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தன் மகனை துணை முதல்வர் ஆக்குவதில் காட்டிய ஆர்வத்தில் ஒரு பாதியேனும் போதை பொருள் நடமாட்டத்தை ஒழிப்பதில் இந்த பொம்மை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காட்ட வேண்டுமென வலியுறுத்துகிறோம். #DrugsMafiaKazhagam https://x.com/i/status/2026582301669548096 #📺அரசியல் 360🔴 #edappadiyar #எடப்பாடியார் வழியில் என்றும் #AIADMK

750 ने देखा
1 महीने पहले