தேவையில்லாத விமர்சனங்களை வைத்து அவதூறு கிளப்பலாமா?
ஆப்பரேஷன் சிந்தூர் நிகழ்ந்த காலகட்டத்தில் "சவுதி அரேபியா - பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம்" கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகளில் எந்த நாடு தாக்கப்பட்டாலும் அது இருநாடுகள் மீதான தாக்குதலாகவே கருதப்பட்டு கூட்டாகப் பதிலடி கொடுக்கப்படும். பின்னர் துருக்கியும் சேர்ந்து கொண்டது. அதைப்பற்றி காங்கிரசுக்கு கவலை இல்லை. அதற்கெல்லாம் எதிர்வினை ஆற்றாத காங்கிரஸ் கட்சி மோடியின் இஸ்ரேல் விஜயத்தைப் பற்றி உலக நியாயம் பேசி அவதூறு கிளப்பலாமா?
பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் விஜயத்தை "வெட்கக்கேடானது" மற்றும் "நேரம் கெட்டது" என்று காங்கிரஸ் பிப்ரவரி 28, 2026 அன்று காங்கிரஸ் கட்சியீன் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் விமர்சித்துள்ளார். மேலும், இது விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கும் இந்தியாவின் வரலாற்று உறுதிப்பாட்டிற்கும் மிகவும் முரணானது என்று அவர் கூறியுள்ளார். இது எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு? எவ்வளவு பொறுப்பற்ற பேச்சு!
பாகிஸ்தானுடன் போர் புரிவது இந்தியாவின் நோக்கம் இல்லை. மேலும் அதில் வெற்றி பெறுவதற்கு இன்னொரு நாட்டின் உதவி இந்தியாவிற்கு நிச்சயம் தேவையில்லை. ஆனால் சீனாவை நம்மால் அப்படி நினைக்க முடியாது. பாகிஸ்தானைப் போலவே இந்தியா தன்னுடைய தேசிய நலன்களை பாதுகாக்க ஒரு வலுவான கூட்டாளியைத் தேடுவதில் தவறு இல்லையே?
தொழில்நுட்ப முன்னேற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில்
இஸ்ரேலுடன் இணக்கமான உறவில் இருப்பது வளைகுடா நாடுகளை எதிர்ப்பதற்காக இல்லை, அதற்கான அவசியமும் இந்தியாவிற்கு இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. நமது ராணுவம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிட வலுவாகவும் எந்தவிதமான தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் திறனுடனும் இருக்கிறது.
அதே சமயம் இந்தியாவிற்கு பாதுகாப்பு விஷயத்தில் முன்னேற்பாட்டுடன் இருக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவுகிறது என்பதற்காக இந்தியா பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருக்க முடியுமா? எனவே, காங்கிரசின் இந்த கருத்து அபத்தமானது, அதிகப்பிரசங்கித் தனமானது, நகைப்பிற்குரியது. இதுதான் தேசப்பற்றின் இலட்சணமா?
இந்தியா மற்ற நாடுகளின் விமர்சனங்களுக்கு பயந்துகொண்டும், மற்ற நாடுகளை திருப்திப் படுத்தவும் முடிவுகள் எடுத்தது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில். இன்று இந்தியா ஆற்றல் மிக்க ஒரு தலைமையின் கீழ் இயங்குகிறது. அது தனது செயல்பாடுகளுக்கு சர்வதேச அரங்கில் எந்த ஒரு வல்லரசின் அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கவில்லை.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை