ShareChat
click to see wallet page

புதிய பிறை புதிய மாதம் புதிய துவக்கம்.. ரமழான் என்பது மனித வாழ்வின் துவக்கமாகும்... வீழ்ந்து கிடந்த மனிதனை மீட்டெடுத்த வஹியின் துவக்கமாகும்... நான் தன்னிறைவானவன்.. நான் சுயம்பு என எகத்தாளம் பேசிய மனிதனின் அகம்பாவம் அழித்து மானுடம் காத்த அல் குர் ஆனின் துவக்கமாகும்.. மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்ள خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ(உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை (இறைவனாகிய)அவனே படைத்தான்! என்ற கட்டளையின் துவக்கமாகும்... படைத்த இறைவன் அல்லாஹு பற்றிய அறிவின் தெளிவின் துவக்கமாகும்... இறைவன் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டான் என நையாண்டி பேசி திரியும் பொல்லா உலகில் பாதிக்கப்பட்டோர் எங்கே இறைவன் என தேடினால் கேட்டால் وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ என்னை குறித்து கேட்கும் அடியார்களிடம் கூறுங்கள் அவர்களின் அருகில் உள்ளேன்..அவர்களின் உயிர் துடிப்பையும் விட நெருக்கமாய் அருகில் உள்ளேன்..என்ற இறையியல் தெளிவின் துவக்கமாகும்... பேச கற்பித்தவன் எழுத கற்பித்தவன் வாழும்கலையை கற்பித்தவன் நீதியை கற்பித்தவன் இறைவன் .. இறைவன் ஒருவனே எனும் மானுடவியலின் துவக்கமாகும்.. அந்த துவக்கத்தின் மறுபதிப்பாய் இன்று நம்மிடையே நமக்கான சான்றாக வருகை தந்திருக்கும் ரமழான் ...புதியது... இன்றிலிருந்து நாமும் நம் வாழ்வை புதுப்பித்துக் கொள்வோம்.... இறைவனை சந்திக்கும் பேருவகை பொழுதை ரமழானில் பெறுவோம்... ரமழான் வாழ்த்துகள்... 🌹 #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲 நபி வார்த்தைகள் 📖 #🤲ரமலான் நோன்பு நேரம்⏰ #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲

8.7K காட்சிகள்