#👌இந்த நாள் நல்ல நாள்🤝
திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள்
பிறப்பு
5 அக்டோபர் 1823
மருதூர், சிதம்பரம்,
இன்றைய கடலூரில், தமிழ்நாடு, இந்தியா
காணாமல்போனது
சனவரி 30, 1874 (அகவை 50) அருட்பெருஞ்ஜோதியில் கலந்தார். மேட்டுக்குப்பம், வடலூர், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வள்ளலார், 1867-இல் கடலூர் மாவட்டம் வடலூரில் "சத்திய தருமச்சாலையை" நிறுவினார். இங்கு வரும் அனைவருக்கும் 3 வேளைகளும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இன்றளவும் செயல்பட்டு வரும் இந்தத் தர்ம சபை வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது. திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், தருமச்சாலைக்கான பொருட்களை மக்களிடம் உபயமாகப் பெற்றே பசிப்பிணியைப் போக்கி வருகிறது.
எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும், மத வெறி கூடாது ஆகியவை இவரின் முக்கிய கொள்கைகள் ஆகும். இவ்வாறு பல கொள்கைகளைக் கொண்டிருந்த வள்ளலார், முதன்மைக் கொள்கையாகக் 'கொல்லாமை' கொள்கை ஆன உயிர்களிடத்தில் அருள் செய்யும் கொள்கையைப் பரப்பியவர். "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" என்று கூறியவர். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே 'திருவருட்பா' என்று அழைக்கப்படுகிறது. இவரது சேவையைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு 2007-ஆம் வருடம் இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.