திருவாளர் பானாசீனாவின் பலே கணக்கு!
ஒரு முறை ஜனநாயகப் பேரவை என்ற பெயருடன் காங்கிரஸ் கோட்டையில் ஊடு செங்கல் உருவிய ப. சிதம்பரம் மீண்டும் அதே கைங்கரியத்தை ரிபீட் செய்வதற்கு நாள் குறித்து விட்டதாகச் சொல்லப் படுகிறது. அது எந்த நாள்? அது, ஒருவேளை, காங்கிரஸ் கட்சி 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைப்பதாக இருந்தால், அந்த கூட்டணி அமையும் நாள் என்க.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெல்லுமா அல்லது தவெக வெல்லுமா என்பது ப.சி. அவர்களுக்கு முக்கியமில்லை. இவருக்கு மீண்டும் ராஜ்யபா MP ஆக வேண்டும். இவரது மகன் கார்த்தி அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று MP ஆக வேண்டும். அம்புட்டுதேன்.
அவருடைய கணக்கில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. அதாவது, தவெகவே சட்ட மன்றத் தேர்தலில் வென்றாலும் அந்தக் கட்சியில் இவருக்கு எந்த விதமான மரியாதை கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. அதாவது, அங்கே அப்பா பிள்ளை இருவரும் MP க்கள் ஆவதற்கு தவெக எதிர்காலத்தில் உதவும் என்ற கேரண்டி இல்லை.
அதே சமயம், எதிர்வரும் தேர்தலில் திமுக கூட்டணி தோற்றாலும், அதனால் இவருக்கு பாதகம் எதுவும் இல்லை. ஆனால், திமுக ஒரே தேர்தலில் அழிந்துவிடப் போவதில்லை என்பது உறுதி. எனவே, அப்பா பிள்ளை இருவருக்குமே திமுக தயவில் நாளை மீண்டும் MP ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனெனில், சிதம்பரம் அவர்களுக்கு திமுக மேலிடத்திடம் நல்ல நெருக்கம் உள்ளது.
இதெல்லாம் போக, இந்த 2026 தேர்தலில் தன்னை நம்பி இருக்கும் சிலருக்கு திமுக கூட்டணியில் சீட்டுகள் வாங்கிக் கொடுக்கவும் இவரால் முடியும். அதாவது ஒரே கல்லில் இரண்டல்ல மூன்று காய்களை அடிப்பதற்கு அப்பச்சி 'காய்' நகர்த்துகிறார் என்று சொல்லப் படுகிறது. என்னே ஒரு தொலை நோக்குப் பார்வை!
முன்னாள் நிதியமைச்சரின் மூளை சாதாரணமான மூளை இல்லை! அவர் மட்டுமல்ல, காங்கிரசின் பெரும்பாலான தூண்கள் இப்படிப்பட்டவைதான். இவர்களை நம்பித்தான் ராகுலும் கட்சியை நடத்துகிறார். அதனால்தான் சாண் ஏறினால், முழம் சறுக்குகிறது!
பின் குறிப்பு: MLA ஆக விரும்பும் சில காங்கிரஸ் சிட்டிங் MLA க்கள் ப.சி. அவர்களுடன் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி MLA ஆகிறவர்கள் தேர்தலுக்குப்பின் அப்போதைய நிலவரத்தைப் பொறுத்து, குதிரை பேரங்களின் மூலம் ஏதாவது ஒரு கூட்டணி ஆட்சி அமைவதற்கு உதவக்கூடும்.
இந்தத் தேர்தலில் என்னென்ன கூத்துக்கள் எல்லாம் நடக்கக் கூடும் என சொல்வதற்கில்லை.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை