ShareChat
click to see wallet page

இது ஊடகங்களின் பொற்காலம் தெருவில் யாராவது பேசிக் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது? அதே சமயம், இரண்டு பேர் கட்டிப் பிடித்து உருண்டால் கூட்டம் சேர்கிறது. வேடிக்கை பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. இன்று ஊடகங்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றால் உலக நடப்புகள் அப்படி! ரஷ்யா - உக்ரைன் போர் ஈரான் - அமெரிக்கா போர் ஆப்பரேஷன் சிந்தூர் வெனிசுவேலா அதிபர் கடத்தல் அமெரிக்க வரிவிதிப்பு கொள்கைகள் அமெரிக்க H-1B விசா பிரச்சினைகள் எப்ஸ்டீன் ஃபைல் சீன ராணுவத்தில் சலசலப்பு US இன் 51வது மாநிலமாக கனடா? கிரீன்லாந்தை நெருக்கும் டிரம்ப் - இப்படி போர், திகில், மர்மம் ஆகியவற்றுடன் உலாவரும் சுவாரசியமான சர்வதேச செய்திகளுக்கு பஞ்சமில்லை. இந்தியாவை எடுத்துக்கொண்டால், காமெடி கலகலப்புக்கு இருக்கவே இருக்கிறார் ராகுல்காந்தி. இதுபோக, தமிழகத்தில் தேர்தல் செய்திகள் வேறு களைகட்டுகின்றன. அதிலும், சமூக ஊடகங்கள் மற்றும் துப்பறியும் இதழ்கள் செய்கிற அலப்பறைகளை சொல்லி மாளாது! இரண்டு அரசியல் தலைவர்களுக்குள் "இரகசியமாக(!)" நடந்த சந்திப்பு எங்கே, எப்போது நிகழ்ந்தது, என்ன பேசிக் கொண்டார்கள் என இவர்கள் விலாவாரியாக சொல்வதைப் பார்த்தால் நமக்கு வியப்பாக இருக்கும். குழப்பமான கூட்டணி பேரங்களைப் பற்றி தெளிவான தகவல்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். உதாரணமாக, தேமுதிக, பாமக(ரா), OPS அணி எந்தக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றன என்ற செய்திகள் அரைமணிக்கொரு தடவை அப்டேட் ஆகும். சம்பந்தப் பட்டவர்களிடம் கேட்டால் "அப்படியா அது எங்களுகே தெரியாதே!" என பதில் வருகிறது. அண்ணி பிரேமலதா அவர்கள் எதிர்பார்க்கும் (குத்துமதிப்பாக?) தொகுதிகள், கோடிகள் (தேர்தல் செலவுக்கு), MP, மந்திரி பதவி என பேரம் பற்றிய விவரங்களை நாலு பேர் நாலு விதமாக சொல்வார்கள். அதெல்லாம் நேரத்திற்கு நேரம் மாறுபடும். தேமுதிக - திமுக கூட்டு உதியானது என்று ஒருபக்கமும், அதிமுகவுடன் தேமுதிக கூட்டு இறுதியானது என்றும் ஒரே நேரத்தில் செய்தி வரும். யாருக்கு எது பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளலாம். சில யூடியூபர்கள் கில்லி மாதிரி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் யார்யாரை வேட்பாளர்களைப் போடுகின்றன என்பது வரையில் Deep ஆக செய்திகளை வெளியிடுவார்கள். அதேபோல, கருத்துக் கணிப்புகளுக்கும் பஞ்சமில்லை. அதுவும் நாலு விதமாகத்தான் வரும். நீங்கள் மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. எது பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் சாய்ஸ். இதுபோக சினிமா செய்திகள் தனி டிராக்! பாலசந்தர் படம் ஒன்றில் கேட்ட வசனம் நினைவுக்கு வருகிறது: அந்தப் படம் பாடாவதின்னு சொன்னாங்களே, அதை ஏன் பாக்கப் போனே? "அதை எப்பிடி பாடாவதியா எடுத்திதிருக்கான்னு பாக்கப் போனேன்." வசனம் கிட்டத்தட்ட இந்த மாதிரிதான் வரும். அப்படித்தான் நாமும் ஊடகங்களை பார்க்கிறோம். கையில் மொபைல் இல்லாமல் கால் மணி நேரம் நம்மால் இருக்க முடிவதில்லை. கண்ணராவி செய்திகளை கேட்காமலும் இருக்க முடிவதில்லை. அதுதானே பொழுதுபோக்கு! செய்தி, படம், பாட்டு, விளையாட்டு என்று நமக்கு எல்லாமும் அதுதானே? சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், உயிருடன் இருப்பவர்களை இறந்ததாக செய்திகளை போட்டு, வாழ்க்கை வரலாறுகளை எழுதுகிறார்கள். இது ரசிக்கும்படி இல்லை. காவல்துறை இது விஷயமாக சம்பந்தப் பட்டவர்களிடம் இருந்து புகார்கள் வராவிட்டாலும், தாமாகவே முன்வந்து அப்படி பதிவிடுபவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை

584 காட்சிகள்