ShareChat
click to see wallet page

தமிழகம் எதில் முதலிடம் வகிக்கிறது? "உலகம் பிறந்தது எனக்காக" என்று நாடாள்பவர்கள் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் கண்ட மேனிக்கு கடன்களை வாங்குவது, ஊரார் வீட்டுப் பிள்ளைகளை தமதூ வசதிக்காக அடகு வைப்பதைப் போன்றது என்றால் அது மிகையில்லை. பிறகு? கடன் வாங்கி தானம் செய்கிறவர் கொடை வள்ளலா? யாரை அடமானம் வைத்து தமிழ்நாடு அரசு கடன் வாங்குகிறது? எதற்காக கடன் வாங்குகிறது? இதை திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு யார் தலையில் விழுகிறது? தமிழகம் எதில் முதலிடம் வகிக்கிறது என்ற கேள்வி இன்று அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்களில் அடிக்கடி கேட்கப்படுகிறது. இந்தியாவில் அதிக கடன் சுமை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக பல தரவுகள் கூறுகின்றன (₹10.62 - 10.71 லட்சம் கோடி 26-27 இடைக்கால பட்ஜெட்). தமிழ்நாடு FY25-ல் கடன்களின் YoY வளர்ச்சியிலும் முதலிடத்தில் உள்ளது (18.5%), பீகார் (15.5%) மற்றும் உத்தரப் பிரதேசம் (15%) ஆகியவற்றைத் தாண்டி! கடன் வாங்குவது தவறு இல்லை. தனிநபர் வாங்கும் கடன்னைவிட அரசின் மூலமாக ஒரு தனிநபரின் தலைமீது விழும் கடன் வகைதொகையின்றி எகிறிக்கொண்டே போனால் எப்படி? மக்களின் ஓட்டு என்பது அரசாங்கம் கடன் வாங்குவதற்காக அவர்கள் லைசன்ஸ் கொடுப்பதற்கான அனுமதி என்று அர்த்தமா? இந்த கடன் எதற்காக வாங்கப் படுகிறது, அதை எப்படி திருப்பிச் செலுத்தப் போகிறோம், அது மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறதா என்பதே முக்கியம். ஒரு மாநிலம் சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், தொழிற்பேட்டைகள் போன்ற நீண்டகால வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்குவது இயல்பானது. இத்தகைய முதலீடுகள் எதிர்காலத்தில் வருமானத்தை உருவாக்கும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி ஏற்படும். வரி வருவாய் உயரும். இப்படியான கடன் “உற்பத்தி கடன்” எனக் கருதப்படுகிறது. இது பொருளாதாரத்திற்கு பலன் தரும். ஆனால் கடன் சுமை ஏற்ற இறக்கம் இல்லாமல் வருடம் தோறும் அதிகரித்துக் கொண்டே போவது ஆபத்தானது. மாநிலத்தின் வருமானத்தை விட கடன் வேகமாக உயர்ந்தால், வட்டி செலுத்துவதற்கே பெரிய தொகை ஒதுக்க வேண்டி வரும். அதனால் கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் போன்ற துறைகளுக்கு நிதி குறைந்து போகும். பட்ஜெட்டில் பெரும் பகுதி கடன் திருப்பிச் செலுத்துவதற்கே ஒதுக்கப்படுகிற நிலை உருவாகும். கடன் சுமை அதிகமாகிக் கொண்டே போவதில் நிறைய ஆபத்துகள் உள்ளன. முதலில், மாநிலத்தின் நிதி மேலாண்மையின் மீது நம்பிக்கை குறையலாம். முதலீட்டாளர்கள் இது ஓர் எச்சரிக்கையாக மாறலாம். இரண்டாவது, மேலும் மேலும் வரிகளை உயர்த்த வேண்டிய நிலை உருவாகலாம். மூன்றாவது, புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு பணம் ஒதுக்க முடியாமல் போகலாம். இதனால் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாவது கடினமாகிறது. உள்கட்டமைப்பிற்கான அரசொன் திட்டச் செலவுகள் குறைந்தால் கட்டுமானம், சேவைத் துறை, சிறு தொழில்கள் போன்றவை பாதிக்கப்படலாம். அரசுகள் ஏழைகளின் ஓட்டுகளை குறிவைத்து கடன் வாங்கி இலவசங்களை வழங்குவது (மேலும் அதை பெருமையுடன் விளம்பரம் செய்வது) குறுகிய காலத்தில் அரசியல் பலன் தரலாம். ஆனால் நீண்டகாலத்தில் இது பொருளாதார சுமையை அதிகரிக்கிறது. இலவசங்கள் முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. உண்மையில் ஏழைகளுக்கு சமூக பாதுகாப்பு அவசியம். ஆனால் உற்பத்தி திறனை உயர்த்தாத, வருமானம் உருவாக்காத செலவுகள் அதிகமாக இருந்தால், அது எதிர்கால தலைமுறைகளுக்கு கடன் சுமையாக மாறும். வளர்ச்சித் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க முடியாமல் போனால் என்ன ஆகும்? புதிய தொழிற்சாலைகள் வராது. அடிப்படை வசதிகள் மேம்படாது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையும். திறமையான மனித வளம் மற்ற மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் செல்லக்கூடும். இதனால் வளர்ச்சி மந்தமாகும். ஆகவே கடன் வாங்குவது தவறல்ல. ஆனால் அது கட்டுப்பாட்டுடனும் திட்டமிட்ட முறையிலும் இருக்க வேண்டும். கடன் வளர்ச்சியை உருவாக்க வேண்டும்; சுமையை அல்ல. நல்ல நிர்வாகம், வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வு ஆகியவை இருந்தால்தான் மாநிலத்தின் நிதி ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴

575 காட்சிகள்