ShareChat
click to see wallet page

ஏடாகூமான கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? அது அப்படியென்ன ஏடாகூடமான கேள்வி என்று கடைசி பத்தியில் பார்க்கவும்! கேள்வி என்பதற்கு பொருள் பலவாறாக இருந்தாலும், பொதுவாக அது வினா என்று அறியப்படுகிறது. தமிழ் இலக்கணப்படி வினாக்கள் அறிவினா, அறியா வினா, ஐயவினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என மொத்தம் ஆறு வகைப்படும். விளக்கம்: அறிவினா: தன்னால் கேட்கப்படும் கேள்விக்கு ஒருவர் விடை அறிந்திருந்தும், அதைப் பிறர் அறிந்துள்ளனரா என்பதை தெரிந்துகொள்வதற்காகக் கேட்கப்படுவது அறிவினா ஆகும். உதாரணமாக, ஓர் ஆசிரியர் மாணவரிடம் கேட்பது அறிவினா எனப்படுகிறது. அறியா வினா: அதே மாணவன் தனக்குத் தெரியாத ஒரூ விடயத்தைப் பற்றி ஆசிரியரிடம் கேட்பதை அறியா வினா எனலாம். அதேபோல, ரயில் நிலையம் எங்கே இருக்கிறது என்று தெரியாத ஒருவர் உங்களிடம் "ரயில் நிலையத்திற்கு எப்படிப் போகவேண்டும்?" என்று வினவினால் அது அறியா வினா. ஐய வினா: இது ஒரு சந்தேகத்துடன் கேட்கப்படும் கேள்வி. உதாரணமாக, "அதோ வருகிறானே அவன் உனக்கு அண்ணனா அல்லது தம்பியா?" என ஒருவர் மற்றவரிடம் கேட்பதை ஐய வினா என்க. ஐயம் என்றால் சந்தேகம் என்பது பொருள். கொளல் வினா: ஒரு பொருளைத் ஒருவர் வாங்கிக்கொள்கிற நோக்கத்துடன் கேட்பது கொளல் வினா? "ஒரு டஜன் வாழைப்பழம் என்ன விலை?" என்பதை கொளல் வினா எனலாம். கொடை வினா: இது பிறருக்கு ஒரு பொருளைக் கொடுக்கும் பொருட்டு வினவப்படுவது. எடுத்துக்காட்டாக "உங்களுக்கு இந்தப் புத்தகம் வேண்டுமா?" என்று கேட்பதை கொடை வினா எனலாம். ஏவல் வினா: ஒரு செயலைச் செய்வதற்கு கட்டளையிடும் பொருட்டு கேட்கப்படும் கேள்வி இது. "குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வருகிறாயா?" என்பதை ஏவல் வினா எனலாம். ஏவல் என்றால் கட்டளை அல்லது ஆணை என பொருள்படும். குற்றேவல் என்றால் எடுபிடி வேலைகள். இப்போது ஒரு ஐய வினா... "ஈரான் போரில் அமெரிக்கா வென்று விட்டதாக டிரம்ப் சொல்வது உண்மையா?" என்று நீங்கள் ஏடாகூமாக ஒரு கேள்வியைக் கேட்டால், அதற்கு பதில் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும், முதலில் அது அறி வினாவா, அறியா வினாவா, ஐய வினாவா என்று எப்படிச் சொல்வது? #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை

862 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்