🗓️இன்று நம் கழகத்தலைவர் M. K. Stalin அவர்கள் நெருக்கடிநிலையின் கீழ் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்ட நாள்.
முத்தமிழறிஞர் கலைஞரை காவல்துறை தேடிவந்தபோது கைதுக்குத் தயாரானார் கலைஞர். ‘’உங்கள் மகன் ஸ்டாலினைத்தான் கைது செய்யவேண்டும்’’ என்றபோது ‘’அவன் வெளியூர் கழக நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கிறான். சென்னை வந்ததும் தகவல் தெரிவிக்கிறேன்’’ என்று சொன்னதுடன். நம் கழகத்தலைவர் சென்னை வந்ததும் காவல்துறையை அழைத்து தகவலும் சொன்ன துணிச்சல்மிக்க தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
திருமணமாகி ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில் சிறைக்குச் சென்ற நம் கழகத்தலைவர் அனுபவித்த சித்திரவதைகள் ஏராளம். தலைவரைக் காக்க தன் இன்னுயிரை ஈந்த தியாக மறவர் சிட்டிபாபுவின் டைரியைப் படிக்கும் யாரும் கலங்காமலிருக்க முடியாது. அப்படி சிறைச்சாலை சித்திரவதைகளால் கொள்கைப்புடம் போட்ட தங்கமாக வெளிவந்து, இன்று வெற்றிகளைக் குவிக்கும் கழகத்தலைவராக, இந்தியாவே போற்றும் நம்பர் 1 முதலமைச்சராக உயர்ந்திருக்கிறார்.
ஜனநாயக மறுப்பு என்பது எவ்வளவு பெரிய அநீதி என்பதை உணர்ந்ததால்தான், இந்திய ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்க நினைக்கும் மதவாத பா.ஜ.க.வுக்கும் அதன் அடிமை அ.தி.மு.க.வுக்கும் எதிராக உறுதியாக நிற்கிறார் நம் கழகத்தலைவர் அவர்கள். அவர் தலைமையில் நாமும் உறுதியாக நிற்போம்!
#MISA #DravidianStock
https://www.facebook.com/share/16p2TF8xYL/
#💪தி.மு.க #🎥Trending வீடியோஸ்📺 #💪மோட்டிவேஷன் வீடியோ🎥 #அநீதிக்கு எதிராக #📺வைரல் தகவல்🤩