ShareChat
click to see wallet page

உலக அரசியலில் நம்பிக்கைக்கு என்ன விலை? சாதாரண பார்வையாளர்களிடம் பல கேள்விகள் எழுகின்றன: 1. பயங்கரவாதத்திற்குத் துணை போகும் பாகிஸ்தானுக்கு வெளிப்படையான ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து செயல்படும் சீனா, ஒரு நட்பு நாடான ஈரான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் நிலையில் ஏன் மௌனம் காக்கிறது? 2. ஈரானுடைய சுதந்திரமானது எந்த நாட்டையும் விட சீனாவுக்கு முக்கியமானது. ஈரான் தன் மீதான தாக்குதல்களை முறியடித்து வெற்றி பெறும்போது, அதனால் பெரிதும் பலனடையப் போவது சீனா எனில், சீனாவின் கள்ள மௌனம் பல்லேறு சந்தேகங்களை எழுப்பவில்லையா? 3. ஈரானுக்கு சீனா மறைமுகமாக ஆயுதங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் ராடார் போன்ற உபகரணங்களை வழங்கியதாக செய்திகள் வந்தன. அதை சீனாவும் மறுக்கவில்லை. ஆனால் முதல்நாள் போரிலேயே கொமேனி கொல்லப்பட்டார். மேலும், இதுவரை அமெரிக்க தரப்பிற்கு பெரிதாக சேதங்கள் எதுவும் இல்லை என்பதால் சீன ஆயுதங்களின் வலிமை மீது நம்பிக்கை வைக்கலாமா? 4. ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் அது அமெரிக்கப் படைகளுக்கு சோர்வைக் கொடுக்கும். அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தைவானை அபகரிக்கலாம் என்ற சுயநலத்தோடு சீனா மௌனம் காத்து வருகிறதா? 5. சமீபத்தில் சீன ராணுவத்தில் நிகழ்ந்த அதிரடி மாற்றங்கள், அதன் ராணுவ அமைப்பே உள்ளுக்குள் நிலைகுலைந்ததற்கான அறிகுறியா? இந்தக் கேள்விகள் அனைத்தும் “நம்பிக்கை” என்ற ஒரு மையச் சொல்லைச் சுற்றி சுழல்கின்றன. உலக அரசியலில் நட்பு என்ற ஒன்று நிரந்தரமல்ல; நட்பு என்பதெல்லாம் சொந்த நலன்கள் சார்ந்தது மட்டுமே. பாகிஸ்தானுக்கு சீனா வெளிப்படையாக ஆதரவளிப்பது, அந்த நாட்டின் புவியியல் மற்றும் பொருளாதாரத் தேவைகளோடு சம்பந்தப்பட்டது. சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) போன்ற திட்டங்கள் சீனாவுக்கு அரபிக்கடல் அணுகலை வழங்குகின்றன. ஆனால் ஈரான் விஷயத்தில் சீனா அதே அளவிலான திறந்த ஆதரவை வெளிப்படுத்தாமல் இருக்கிறது. காரணம்: சீனாவின் வர்த்தக நலன்கள் மேற்குலக நாடுகளுடனும் ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளன. ஈரான் தாக்குதல்களை முறியடித்து வெற்றி கண்டால், சீனாவுக்கு எண்ணெய் பாதுகாப்பு, மேற்காசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கு குறைதல் போன்ற பலன்கள் கிடைக்கலாம். இருந்தாலும், நேரடியாக களமிறங்குவது சீனாவுக்கு தேவையற்ற சர்வதேச மோதல்களை உருவாக்கும். அதனால் தான் அது “மூலோபாய மௌனம்” காத்திருக்கலாம். மௌனம் என்பது பலவீனம் அல்ல; சில நேரங்களில் அது கணக்கிட்ட காத்திருப்பாக இருக்கலாம். சீனா ஈரானுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கியதாக கூறப்படும் தகவல்கள் உண்மையாக இருந்தாலும், எந்த தொழில்நுட்பமும் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யாது. உளவு தகவல் தவறுகள், உள்ளக துரோகம், அல்லது எதிரியின் முன்னேற்றமான தாக்குதல் ஆகியவை எந்த அமைப்பையும் துளைக்க முடியும். எனினும், போரில் இதுவரை அமெரிக்காவிற்கு பெரிய அளவில் சேதம் இல்லை என்பதால், பெரிதாகப் பேசப்பட்ட சீன ஆயுதங்களின் வலிமை மற்றும் மேன்மை கேள்விக்குள்ளாகிறது. அமெரிக்கா ஈரானில் சிக்கிக் கொண்டால், சீனா தைவான் தொடர்பான தனது நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வாய்ப்பு தேடுகிறதா என்பது ஓர் அரசியல் கணிப்பு. ஆனால் தைவான் பிரச்சினை மிக நுணுக்கமானது. ஒரு தவறான அசைவால் ஒரு பிராந்திய போர் வெடிக்கலாம். அதனால் சீனா நேரடி மோதலைத் தவிர்த்து, நீண்டகால உத்தியைப் பின்பற்ற வாய்ப்பு அதிகம். சீன ராணுவ மாற்றங்கள் குறித்து பேசப்படும் செய்திகள், அதிகார மையப்படுத்தல் மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சிகளாகவும் பார்க்கப்படலாம். எச்சரிக்கை! Friendship between two nations is at their own risk. உலக அரசியலில் நம்பிக்கை என்பது உணர்ச்சி சார்ந்த மதிப்பு அல்ல; அது பரஸ்பர நலன்களின் கணக்குப் புத்தகம். நாடுகள் நட்பை விற்கவில்லை; ஆனால் நலன்களை வாங்குகிறது. எனவே “நம்பிக்கைக்கு என்ன விலை?” என்றால் — அதன் விலை எப்போதும் நலன்களின் அளவுக்கே சமம். ஆனால்... அமெரிக்கா இஸ்ரேலின் மீது வைத்துள்ள நம்பிக்கை அதற்கு விதிவிலக்கு! #iran #china #usa #india #war #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை

753 ने देखा
5 दिन पहले