ShareChat
click to see wallet page

#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்மத்துல்லாஹி_வபரகாத்தஹு இப்பதிவு தங்களை பூரண உடல் நலத்துடனும் சீரிய இஸ்லாமிய சிந்தனையோடும் சந்திக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன். وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَ تَرَى الْاَرْضَ بَارِزَةً  ۙ وَّحَشَرْنٰهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ اَحَدًا‌ ‏ வ யவ்ம னுஸய்யிருல் ஜிBபால வ தரல் அர்ள BபாரிZஜ த(ன்)வ் வ ஹஷர்னாஹும் Fபலம் னுகாதிர் மின்ஹும் அஹதா (நபியே!) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். (அல்குர்ஆன் : 18:47) وَعُرِضُوْا عَلٰى رَبِّكَ صَفًّا لَقَدْ جِئْتُمُوْنَا كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍ بَلْ زَعَمْتُمْ اَ لَّنْ نَّجْعَلَ لَـكُمْ مَّوْعِدًا‏ வ 'உரிளூ 'அலா ரBப்Bபிக ஸFப்Fபா, லகத் ஜி'துமூனா கமா கலக்னாகும் அவல மர்ரஹ்; Bபல் Zஜ'அம்தும் அல்லன்னஜ்'அல லகும் மவ்'இதா அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; “நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்). (அல்குர்ஆன் : 18:48) #🕌இஸ்லாம் #🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #மாமனிதர்_நபிகள்_நாயகம் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

550 ने देखा