ShareChat
click to see wallet page

செங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாடை தூக்கும் போராட்டம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த திருவள்ளுவர்நகர் பகுதியில் வரதன்தாங்கள் ஏறி கோடியை அழித்து வீட்டு மனை பிரிவு போட தார் சாலை அமைத்தும் நீர் பிடிப்பு பகுதியில் புதிய கட்டிடங்களை கட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கின்ற வகையில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருவாய் துறையினர் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றிட பலமுறை வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சி தலைவர் ஆக்கிரமிப்பை அகற்றிட உத்திரவிட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத தமிழ்நாடு அரசின் நகராட்சி ஊரக வளர்ச்சித்துறை வருவாய்த்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுக்கா செயலாளர் சர்தார் தலைமையில் பாடை தூக்கும் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விரைந்து சென்ற வருவாய்த் துறையினர் செங்கம் காவல்துறையினர் உதவியுடன் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்த்த சேட்டு என்பவரின் கட்டிட பணிகளை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றினர் இதனைக் கண்டு அதிருப்தி அடைந்த சேட்டுவின் குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள அனைவரது வீட்டையும் இடிக்காமல் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி தன் வீட்டை மட்டும் இடித்து வருவாய்த் துறையினர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்வதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. #👉வாழ்க்கை பாடங்கள் #📺வைரல் தகவல்🤩

413 காட்சிகள்