செங்கத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாய்களின் தொல்லை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரப் பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும் இதனால் சாலையில் பொதுமக்கள் நிம்மதியோடு நடந்து செல்ல கூட முடியாமல் அச்சத்தில் இருந்து வருவதாகவும் பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்
செங்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனை வரை சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நாய்கள் சாலைகளில் கூட்டமாக சுற்றி திரிந்து வருவதால் அவ்ழியாத நடந்து செல்லும் பள்ளி மாணவர்களையும் பொது மக்களையும் வாகன ஓட்டிகளையும் நாய்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சாலையில் நடந்து சொல்லும்போது அச்சுத்துடன் கடந்து செல்வதாகவும் குற்றச்சாட்டி வருகின்றனர்.
மேலும் தெருக்களில் விளையாடும் குழந்தைகளை தெருவில் சுற்றி திரியும் நாய்கள் கடிக்க முயல்வதாகவும்
இதனால் நாய்களிடமிருந்து குழந்தைகளை காப்பாற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
உயிர் சேதமோ அசம்பாவிதமோ ஏற்படும் முன்பு செங்கம் நகராட்சி அலுவலகத்தினர் சாலையில் சுற்றி திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்