ShareChat
click to see wallet page

இந்த நாள் எப்படிப் போகும்? அதை யாரே சொல்ல வல்லார்? தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களத்தில் புயல் வேகத்தில் காட்சிகள் மாறுகின்றன. * காங்கிரஸ் திமுக கூட்டணியில் நீடிக்காது, தவெகவில் இணையவே வாய்ப்பு அதிகம் - இது காலைச் செய்தி. காங்கிரஸ் திமுக கூட்டணியிலேயே நீடிக்கிறது. இது மாலையில் நிலைமை. * பேரம் படிந்தது, திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் (காலை). நாங்கள் யாருடனும் பேரம் பேசவில்லை - பிரேமலதா (மதியம்) அதிமுக கூட்டணியில் தேமுதிக? BJP தலைவர் பேச்சு. (இரவு) * ராமதாஸ் ஸ்டாலினிடம் உருக்கமான வேண்டுகோள். (காலை) பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது - திருமாவளவன். (இரவு) ராமதாஸ்-பாமக தவெகவுடன் பேச்சுவார்த்தை. (நள்ளிரவு) தினம் தினம் இதே செய்திகள் வெவ்வேறு விதமாக ஊடகங்களில் வெளிவரும். டிவியில் விவாதங்கள் நடக்கும். பலவிதமான கருத்துக் கணிப்புகள் வெளிவரும். ஒன்றில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று வந்தால் மற்றொன்றில் அதிமுக அல்லது தவெக என்று வரும். எந்த கட்சி எந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளது என்று தேர்தலுக்கு முதல் நாள் தெரிந்தால் அது பெரிய விஷயம். இடையிடையே ஜோசியர்களின் ஆரூடங்களுக்கும் பஞ்சமில்லை. கடைசியில், ஓட்டுக்களுக்காக மக்களுக்குக் கொடுக்கப்படும் பணமும் அன்பளிப்புகளும் ஒருவேளை தேர்தல் வெற்றியை தீர்மானிக்கலாம். எனவே மக்களில் ஒரு சாரார், ஓட்டுப் போடுவதே வேஸ்ட் என்றும், ஓட்டு போட்டே ஆகவேண்டும் என்றால் நோட்டாவிற்குப் போடுவது மேல் என்ற மனநிலையிலும் இருக்கிறார்கள். என்றாலும், ஜனநாயகத்தை விட சிறப்பானதோர் ஆட்சிமுறையை மனித குலம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. அது ஒருக்காலும் சாத்தியம் இல்லை என்பதே சத்தியம். Best of a bad lot எது? என்று கண்டு பிடித்து ஓட்டுப் போடுவதில்தான் மக்களுடைய சாமர்த்தியம் இருக்கிறது. மேலும், அது மக்களின் கடமை. இலவசங்கள், சலுகைகள், அன்பளிப்புகள் ஆகியவை ஒரு புறம் வரிசை கட்டி வந்தாலும் அதற்காக நாம் கொடுக்கும் விலை என்ன? தீண்டாமை வன்கொடுமைகள் சாராய கலாச்சாரம் கல், மணல் கொள்ளை அநியாய கல்விக் கட்டணங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை போதை வஸ்துக்கள் நடமாட்டம் கொலை, கொள்ளை & கற்பழிப்பு அராஜகம் & கட்டை பஞ்சாயத்து - இதெல்லாம் அதிக விலை என்ற ஞானோதயம் மக்களிடம் பிறக்கும் போதுதான் நல்லாட்சி மலர்கிறது. ஆட்சியை மாற்றும் அதிகாரம் மக்களிடம் உள்ளது என்பதே ஜனநாயகத்தின் பலமான அஸ்திவாரம். இன்றைய காலகட்டத்தில் தேர்தலில் போட்டி போடுவது சாதாரண காரியமில்லை. ஆனால், மக்கள் நினைத்தால் கட்சிகளுக்கு வெற்றி அல்லது தோல்வியை பரிசாகத் தர முடியும்! மாற்றம் ஒன்றே மாறாதது. அந்த மாற்றம் இல்லையென்றால் தேக்கநிலை தொடரும்; ஏமாற்றமே மிஞ்சும். #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை

502 ने देखा