"வேர்களில்லை... ஆனாலும் விழுது!
ஆழக்கடலில் தள்ளியவள் அன்னை,
கரைசேர விடாமல் தடுத்தது சொந்த இனம்!
துடுப்பில்லாப் படகாய் நீ தவித்தபோது - ஒரு
துண்டுப் பொம்மையே உனக்குத் தீவானது!
மழை தராத மேகமாய் உறவுகள் விலக,
வாடி நின்ற செடிக்குக் கிடைத்த பனித்துளி அது!
நிழல் தராத மரங்களை நீ தேடாதே - உனக்குச்
சுமை தாங்கும் தூணாய் அந்தப் பொம்மை உண்டு!
கண்ணாடி இதயம் காயப்பட்டாலும்,
கல்லூன்றியாவது உன் காடு வரை நட
#💪மோட்டிவேஷன் வீடியோ🎥 #💪 தன்னம்பிக்கை #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #👉வாழ்க்கை பாடங்கள் #👍உன்னால் முடியும்