ShareChat
click to see wallet page

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் யாருடனும் கூட்டணி இல்லை என்பது சீமானின் நிலைப்பாடு. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு - கூட்டணிக்கு வாருங்கள் என்று விஜய் அறைகூவல் (அதை கூப்பாடு என்க)! அதிமுக மற்றும் திமுக கட்சிகளே கூட்டணிக்காக அலைமோதும்போது இது, "ராவுத்தரே கொக்காப் பறக்குறாராம், குதிரை கோதுமை ரொட்டி கேக்குதாம்" என்ற கதைதான். தனித்துப் போட்டியிட்டால் தவெக மற்றும் நாதக ஆட்சியைப் பிடிப்பது துர்லபம். ஒருவேளை இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு உள்ளது. அந்த நிலையிலும், இவ்விரு கட்சிகள் அல்லது இவற்றில் ஏதைவதொன்றை சேர்த்துக்கொண்டு ஆட்சி அமைப்பதற்கு, அதிமுக அல்லது திமுகவிற்கே வாய்ப்பு அதிகம். இந்த எதார்த்தத்தை புரிந்துகொண்டு தவெக - நாதக கூட்டணி அமையாமல் போனால், அடுத்த 2031 தேர்தல் வரை இவ்விரு கட்சிகளும் கட்சித் தொண்டர்களை தக்கவைத்துக் கொள்வது கடினம். எனவே, திமுகவை வீழ்த்துவது ஒன்றே விஜய் மற்றும் சீமானின் முக்கியமான குறிக்கோளாக இருந்தும், அவர்கள் கூட்டணி அமைத்து செயல்படத் தவறினால் அதற்குக் காரணம் அவர்களது ஈகோ பிரச்சினையே எனலாம். தலைப்பில் இருப்பது காமராஜரின் கூறிய ஒரு பிரபலமான கருத்து. அது இன்றைய காலகட்டத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தவெக மற்றும் நாதக கட்சிகளின் தலைவர்களான விஜய் மற்றும் சீமான் அவர்களுக்கு பொருந்தும். இந்த இரண்டு கட்சிகளுக்கும் கொள்கை, சித்தாந்தம் என்பதெல்லாம் இல்லை; தலைவர்கள் என்ற தனிப்பட்ட மனிதர்களை நம்பியே இயங்குகின்றன. ஒரு கட்சின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தம் என்பது தெளிவான நோக்கங்கள், நிலைத்தன்மை ஆகியவற்றை கொண்டது. தமிழ் தேசியம் என்பது ஒரு தெளிவான சித்தாந்தமாக இல்லை, மாறாக மொழி, இனம் சார்ந்த உணர்வாக மட்டுமே உள்ளது. தவெகவின் கொள்கை என்பது ஒரு "அது + இது" என ஒரு கிச்சடி மாதிரி. அதைப் பற்றி விஜய்க்கே தெரியுமா என்பது சந்தேகமே! அந்தக் கட்சியைப் பொறுத்த அளவில் கொள்கை, சித்தாந்தம் என்பதெல்லாம் ஒரு சம்பிரதாயம். கட்சியில் இருப்பது விஜயின் ரசிகர்களே தவிர, கொள்கைகளைப் பற்றிக் கவலைப்படுகிற தொண்டர்கள் இல்லை. தனியே களம் காணப்போகும் இருவருக்குமே அரசியல் எதார்த்தம் புரியவில்லை; கட்சிகளின் வளர்ச்சிக்கு தலைவர்களின் ஈகோ ஒரு பிரச்சினையாக உள்ளது. அவர்களை நம்பி அரசியலுக்கு வந்த இளைஞர்களின் சக்தியை வீணாக்கி வருகிறார்கள். இளைஞர்களை வழி நடத்த வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு இருக்கிறது. சீமானுக்கு வயது 60 நடக்கிறது. இனி எத்தனை காலம்தான் கட்சியை வளர்த்துக் கொண்டே இருப்பார்? 70 என்பது அரசியலில் ஓய்வு பெறவேண்டிய வயது. 2026 இல் பஸ்ஸை தவறவிட்டால் அவருக்கு இருப்பது 2031 மட்டும்தான். மேலும், விஜய் ஒன்றும் இளைஞர் இல்லை. இவர்கள் இன்னொரு கூட்டணியில் இணைய வேண்டும் அல்லது இவர்கள் இருவரும் கூட்டணி அமைக்க வேண்டும். அதுதான் சிறந்த அரசியல் முடிவு! செய்வார்களா, அவர்கள் செய்வார்களா? #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை

1.7K ने देखा