Kovai Child Organ Donation | 7 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 8 வயது சிறுமி.. அரசு சார்பில் மரியாதை
கோவையில் மூளைச்சாவு அடைந்த 8 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். கவுன்சிலர் சந்தோஷ், சுகன்யா தம்பதியின் மகளான வெண்பா, கடந்த 23ம்தேதி மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மயங்கி விழுந்துள்ளார். தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நெஞ்சம் தாங்கா துயரத்திலும், மகளின் உடல்உறுப்புகளை தானம் செய்த பெற்றோர் முன்வந்த நிலையில், 7 பேருக்கு அவர் மறுவாழ்வு கொடுத்துள்ளார். சிறுமியின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
#😮இறந்தும் வாழ்வளித்த 8 வயது சிறுமி👧