ShareChat
click to see wallet page

#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 செங்கம் அருகே காவல் அதிகாரி பெண்ணை தாக்கிய வீடியோ இணையத்தில் பரவியதால் பரபரப்பு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கடலாடி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காஞ்சி பகுதியில் அஃப்ருக் மனைவி பர்வீன் என்பவர் மூன்று சக்கர வாகனத்தில் வெங்காயம் தக்காளி காய்கனிகள் வியாபாரம் செய்து வந்த நிலையில் கடலாடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் என்பவர் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நின்று வியாபாரம் செய்யக்கூடாது என கடந்த மூன்று நாட்களாக எச்சரித்து வந்ததாக கூறப்படுகிறது மற்ற அனைவரையும் விட்டுவிட்டு தன்னை மட்டும் தொந்தரவு செய்வதாக பர்வீன் கேள்வி எழுப்ப ஆத்திரமடைந்த காவல் துறை அதிகாரி பர்வினை தாக்கியதாக அதில் பர்வீன் ரத்தம் காயங்களுடன் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் பர்வீன் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெண்ணை தாக்கிய காவல்துறை அதிகாரி மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பர்வீன் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

742 ने देखा