ShareChat
click to see wallet page

ஓர் உயிலைத் தேடி... நமச்சிவாயத்தின் நண்பர் சித்தையனுடைய அப்பாவுடன் பிறந்தவர்கள் ஏழு ஆண்கள், ஒரே ஒரு பெண் பச்சை. மாமா ராமைய்யா இறந்து விட்டார், குழந்தை குட்டி இல்லை. உறவுகளைத் தாண்டி ராமைய்யாவும் சித்தையனுடைய அப்பாவும் நல்ல நண்பர்கள். அவருடன் பிறந்த ஆண்களில் அவரைத்தவிர இருவர்தான் இன்று உயிருடன் இருக்கிறார்கள். ஒருவர் வாத்தியார், ஒருவர் கிராம அதிகாரி. எல்லோரும் சொந்த ஊரான வேப்பங்குளத்தில் இருக்கிறார்கள். ராமைய்யா பேருக்கு இருந்த பத்து ஏக்கர் நிலத்தை அவர் சித்தையனுடைய அப்பா பேருக்கு உயில் எழுதி வைத்துவிட்டு போனவாரம் காலமானார். உயில் பச்சையிடம்தான் இருக்கிறது. சித்தையனுடைய அப்பா சென்னையில் செட்டிலாகி விட்டதால் சித்தப்பாமாருக்கு நிலத்தின் மேலே ஒரு கண். மாமா இறந்த நான்கு நாட்களில் தந்தையின் மறைவு. அதன் பிறகு சித்தையன் மாமாவின் நிலத்தை விற்று விட்டு அத்தையை தன்னுடன் சென்னையில் வைத்துக் கொள்ள முடிவெடுக்கிறார். போனில் முடிவை சொன்னபோது பச்சை அத்தையும் அதற்கு ஒப்புக் கொள்ளவே, நிலத்தை கிரயம் பேசி முடித்துவிட்டு அத்தையை கூட்டி வர சித்தையன் வேப்பங்குளத்திற்கு சென்றார். பிறகு நடந்ததை அவரே கூறுகிறார். பொழுது சாய ஊர் போய் சேந்துட்டேன். அத்தைக்கு கருப்பட்டி மிட்டாயும் சீனிச்சேவும் வாங்கிட்டுப் போனேன். சின்னையாமாரு வீடுகளுக்கு போயி ஒப்புக்குதான் பாத்துட்டு வரணும்னு நினைச்சேன். ஏன்னா, அப்பாவுக்கு அவங்ககூட பேச்சுவார்த்தை இல்லாமதான் இருந்துச்சி. சரி, அலுப்பா இருக்கு, வேத்து இடம் வேறே, அதனால எதுக்கும் இருக்கட்டும்னு ஓரு குவாட்டரை (சரக்கு) வாங்கிட்டுப் போனேன். ராத்திரி சுடச்சுட கும்பா நிறைய கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும். அப்பிடியே ஆத்தா கைப்பக்குவம் மாதிரியே இருந்துச்சி. நல்லா சாப்டுட்டு நாலு லோட்டா தண்ணி குடிச்சேன். லோட்டால பெரிய படிக்கு ஒரு படி (நாழி) தண்ணி பிடிக்கும், அத்தந்தண்டி! சரக்கை நாளைக்கு அடிச்கலாம்னு, வெளிய எடுக்கலை. காலைல எந்திரிச்சி காப்பித் தண்ணிய குடிச்சிட்டு அத்தை எடுத்துத் தந்த பொட்டியத் தொறந்து பாத்தா உயிலு இல்லை. எனக்கு உசுரே போயிருச்சி. வாத்தியாரு சம்சாரத்துகிட்டதான் நான் வர்ற சமாச்சாரத்த அத்தை சொல்லிருக்காம். மக்காநாத்து அது வீட்டுக்கு வந்துட்டுப் போச்சின்னு அத்தை சொல்லிச்சி. சரி, எதுக்கும் முன்சீப் அண்ணன போய் பாப்பம்னு அத்தை சொன்னத வச்சி அங்கன போனோம். நம்மள வான்னு, கூப்டுட்டதோட சரி, காப்பித்தண்ணி சாப்புடுறியான்னு கூட சின்னாத்தா கேக்கல. விஷயத்தச் சொன்னதும் சின்னையாவுக்கு திக்குன்னு ஆய்ப்போச்சி. ஆனாலும், சித்தப்பா சமாளிச்சிக்கிட்டே உயில்ல நிலத்தையும் வீட்டையும் அண்ணந்தம்பிக எட்டுப் பேருக்கும்தான் எழுதிருக்கேன்னு மாமா எங்கிட்ட சொன்னாரு. நீ எதுக்கும் கவலைப்படாதே தாயி, அப்பிடியே செஞ்சிப்புடலாம்னு அத்தைகிட்ட ஒரே போடா போட்டுட்டாரு. பேசுனத எல்லாத்தையும் கேட்ட பிறகு சின்னாத்தாவுக்கு எம்மேல பாசம் பொங்கிருச்சி. சாப்டுத்தான் போகணும்னு சும்மானாச்சும் ஒத்தக்கால்ல நின்னது! எங்கூடப் படிச்ச ஒருத்தர் வக்கீலா இருக்கார். அவர போன்ல கூப்புட்டு, அன்னிக்கு ராத்திரியே விவரத்த சொன்னதும், உடனே அத்தையக் கூட்டிக்கிட்டு மெட்ராசுக்கு வந்துரு. அங்கன இருந்தா அத்தை உசுருக்கு பாதுகாப்பு இல்லன்னு சொன்னார். ஏன்னு கேட்டா, நீ இங்கன வா, எல்லாத்தையும் வெலாவாரியா பேசிக்கலாம்னு சொல்லிட்டார். "இன்னிக்கு உயில் இல்லாத பட்சத்துல மாமா சொத்துக்கு அத்தைதான் வாரிசு. இருக்கிற சொத்தை அவங்க உன் பேருக்கு எழுதி வைக்கலாம். அப்பிடி எழுதி வைக்கலன்னா, வேற நேரடி வாரிசு இல்லாத பட்சத்துல, அவங்க காலத்துக்குப் பிறகு எல்லா அண்ணந்தம்பிகளும் உரிமை கொண்டாட முடியும். உயிலை எழுதி ரிஜிஸ்தர் பண்ணி வச்சிட்டா, பிறகு பிரச்சினையே இல்லை, அத்தைக்கும் பாதுகாப்பு. நீயும் வேணும்கிறப்ப வித்துக்கிடலாம்" ன்னு வக்கீல் சொன்னார். "காலமான இன்னார் மனைவி இன்னாருக்கு" ன்னு எழுதுன உயிலை ரிஜிஸ்டர் செஞ்சது தெரியாம, VAO சின்னய்யா ஓரு கட்சி புள்ளி மூலமா கமுக்கமா நிலத்த மாமா விக்கிற மாதிரி போலியை கையெழுத்து போட்டு கைமாத்தி விட ஏற்பாடு செஞ்சார். (வித்ததுக்குப் பிறகு மாமா செத்ததா டெத் சர்டிபிகேட் எடுக்குறது பிளான்!) வில்லங்க பத்திரம் வாங்குறப்ப உயில் ரிஜிஸ்தரான விவரம் தெரிஞ்ச புள்ளி பின்வாங்கிட்டு சொன்னது: "எல்லாம் திருட்டுப் பசங்க!" உயிலை எழுதுன நாலஞ்சி மாசத்துல அத்தை செத்துப் போயிருச்சி. ஆனா காரியத்துக்கு சின்னய்யாமாரு வரலை. எப்பிடி வருவாக? VAO சின்னய்யா நல்ல முறையில பேசியிருந்தா மாமா சொத்தை எல்லாரும் பகுந்துட்டு போயிருக்கலாம். இப்ப பாருங்க, எனக்கு பிள்ளையில்லை. ஆனா, வீடு, நிலம், நகைன்னு சொத்து கிடக்கு. அதை யாருக்கு குடுக்கிறது? #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை

504 ने देखा