#🎊பொங்கல் சிறப்பு நிகழ்வுகள்🫶
*தாம்பரம் காவல் ஆணையரகம் உட்பட்ட பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாடிய காவல் ஆய்வாளர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்*
பொங்கல் பண்டிகையொட்டி தமிழகம் முழுவதும் அரசு அலுவலங்கள், காவல்நிலையஙகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அதன்படி தாம்பரம் மாநகர எல்லைக்கு உட்பட்ட குரோம்பேட்டை, பல்லாவரம் காவல்நிலையங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் தாம்பரம் மாநகர ஆணையர் அமல்ராஜ் ஐ.பி.எஸ். காவல்நிலையத்தில் பொங்கல் கொண்டாடிய காவல் ஆய்வாளர்களை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி குரோம்பேட்டை காவல் ஆய்வாளர் தயாள், பழனிவேல் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்..
இதனால் அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.