இந்த தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது முதலை-சிங்கம் கூட்டணி மாதிரிதான்
எதிர்வரும் தேர்தலில் ஒருவேளை திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தாலும், காங்கிரசுக்கு திமுகவினர் ஈடுபாட்டுடன் வேலை செய்வார்களா? இந்த விஷயம்தான் இன்று காங்கிரஸ் வட்டாரத்தில் அதிகம் விவாதிக்கப்படும் பொருளாக இருக்கிறது.
முதலையும் சிங்கமும் ஒன்றை ஒன்று வேட்டையாடும் போட்டியாளர்கள். ஒன்று நீரில், ஒன்று நிலத்தில். இந்த தேர்தலைப் பொறுத்த அளவில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் அது பொருந்தாக் கூட்டணியாகத்தான் அமையும் என்று பெரும்பாலான காங்கிரசார் கருதுகிறார்கள். ஏனென்றால், காங்கிரசின் கணக்கு வேறு, திமுகவின் கணக்கு வேறு.
நேரடியான தொண்டர் பலம் இல்லாத காங்கிரசை பொறுத்த அளவில் ஓட்டு போடுபவர்கள், காங்கிரஸ் அனுதாபிகளான பொதுமக்களின் ஒரு பிரிவினர்தான். அவர்கள் அகில இந்திய அளவில் BJPயை எதிர்க்கும் நோக்கிலாவது திமுக வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவார்கள். ஆனால், திமுகவிற்கென ஒரு வலிமையான வாக்கு வங்கி உள்ளது.
தற்போது பெரும்பாலான இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் வெளிப்படையாகவே காங்கிரசை தாக்கிப் பேசுவதை காண முடிகிறது. முந்தைய சில தேர்தல்களில் திமுகவினர் காங்கிரஸ் வேட்பார்களுக்காக மனதாற செயல்படாததால் திமுகவைவிட காங்கிரஸ் பெரும் தோல்வியை தழுவியது என்ற ஒரு கருத்து காங்கிரசார் மத்தியில் உண்டு.
2011 & 2016 இல் திமுக & காங்கிரஸ் வென்ற தொகுதிகள், போட்டியிட்ட தொகுதிகள் மற்றும் வெற்றி சதவீதம் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
DMK: 23 out of 124 in 2011 - 18.55%
CNG: 5 out of 63 - 7.94%
DMK: 89 out of 176 in 2016 - 50.57%
CNG: 8 out of 41 - 19.41%
இதில் ஏமாந்தது யார் என மேற்கண்ட சூழ்நிலையை வைத்து பார்த்தால், இந்த தேர்தலிலும் திமுகவினர் முழு மனதுடன் காங்கிரசுக்காக தேர்தல் வேலை பார்ப்பது சந்தேகம் என கட்சியில் ஒரு சாரார் நினைப்பதில் ஆச்சரியம் இல்லை. அதே சமயம், தவெகவுடன் கூட்டு சேர்ந்தால் அதன் தொண்டர் பலமும் காங்கிரசுக்கு கிடைக்கிறது.
தவெகவுடன் கூட்டணி அமைப்பதனால், காங்கிரசுக்கு தவெகவின் தொண்டர் பலம் மட்டுமல்ல, தவெக ஆதரவாளர்களின் மொத்த ஓட்டும் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
* அதிக தொகுதிகள்
* ஆட்சியில் பங்கு
இவை இரண்டும் கூட்டணி பேச்சுவார்த்தையில் முக்கியமான பிரச்சினைகள்தான். ஆனால், அதைவிட முக்கியமாக, திமுகவின் சர்வாதிகாரமான போக்கினை காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும்பாலான இளம் தலைவர்கள் விரும்பவில்லை.
சுருக்கமாகச் சொன்னால் திமுகவின் B டீமாக இருக்க வேண்டுமா என்பதே காங்கிரஸ் தொண்டர்களின் ஆதங்கமும் கூட! கட்சியின் எதிர்காலத்தையும் மனதில் வைத்து, சிலர் இன்னொரு கேள்வியையும் முன்வைக்கிறார்கள்.
அதாவது திமுகவினர் இழுத்த இழுப்புக்கு சட்டசபை தேர்தலில் இதுரை காங்கிரஸ் விட்டுக்கொடுத்துப் டோயுள்ளது வரலாறு. அதே போல பாராளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரசுக்கு இதுவரை விட்டுக்கொடுத்ததா? இந்தக் கேள்வி நியாயமானதுதானே?
தவெகவுன் கூட்டு சேர்ந்தால் இரண்டு கட்சிகளுக்கும் எதிர்காலம் (இல்லையென்றால் இருவருக்கும் இல்லை.) குறைந்த பட்சம் தொங்கு சட்சபைக்கு வித்திட்டு திமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணமே
இன்று காங்கிரசில் மேலோங்கி உள்ளது.
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴