ShareChat
click to see wallet page

தை பூசம் விளக்கம் Description of Tai Poosam வள்ளல் பெருமான் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார். காரணம் தை மாதத்தில் பூசம் நட் சத்திரம் வருகின்ற தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும். தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள். மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பதாகும். அகரம் +உகரம்+மகரம்=ஓம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் இருக்கும். அப்போது ஞானசபையில் இருந்து அக்னியான ஜோதி காண்பிக்கப்படும். அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி * சந்திரன் என்பது மனஅறிவு. * சூரியன் என்பது ஜீவ அறிவு. * அக்னி என்பது ஆன்மா அறிவு. பிறவாயாகை பெரியோன் சந்திரன் சூரியனில் அடங்கி, சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தைபூசம். மனம் ஜீவனில் அடங்கி, ஜீவன் ஆன்மாவில் அடங்கி, ஆன்மா சிவத்துடன் கலந்து விடும் என்பதை காட்டவே தைபூசம் நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது. #ஓம் முருகா #ஓம் முருகா 🙏🕉️ #தைப்பூசம் #🙏 ஓம் நமசிவாய #🙏🔱ஓம் ந ம சி வா ய🔱🙏

807 ने देखा