தினம் ஒரு அறிவிப்பு, தினந்தோறும் தீபாவளி!
இன்றைய செய்தி
சிறப்பு உதவி: தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் சிறப்பு உதவியாக பிப்ரவரி 13, 2026 அன்று ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மாதம் ₹1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய சிறப்புத் திட்டமாக இந்த கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் பயனாளிகளின் கணக்கில் பணம் சேர்ந்ததற்கான குறுஞ்செய்திகள் (SMS) வரத் தொடங்கியுள்ளன.
இன்றைய செய்தி (13 பிப். 2026) தொடர்கிறது...
"₹32,000 கோடி முதலீட்டில் 52 பணிகள் தொடக்கம்: 82,000 பேருக்கு வேலை வாய்ப்பு. மேலும் 71 புதிய திட்டங்களுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்." (தினத்தந்தி).
நேற்றைய செய்தி (12 பிப். 2026)
"பேரூர் கடல் நீரை குடிநீராக்கும் நிலைய பணிகள் தீவிரம்." (தினத்தந்தி).
இவைல்லாம் சாம்பிள்கள்தான். இந்த மாதிரியான அறிவிப்புகளை ஆளும் கட்சியினரால்தானே (அறிவிப்புகளை மட்டுமே!) வெளியிட முடியும் என்பதால், காற்றுள்ளபோதே திமுக தூற்றிக்கொள்கிறது. பிற கட்சிகள் வயிறெரிந்து பார்க்க வேண்டியதுதான்.
தேர்தல் நெருங்க நெருங்க செய்திகள் மேலும் தூள் பறக்கும். தேர்தல் முடிந்து ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால், தமக்குத்தாமே பாராட்டு விழாக்களை நடத்துவதற்கே நேரம் சரியாக இருக்கும்.
ஆட்சிக்கு வந்து நான்கரை வருடங்களாக தீர்க்கமுடியாமல் இருந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம், சாலைகள், பாலங்கள் போன்ற பல பிரச்சினைகள் அசுர கதியில் இரண்டே மாதங்களுக்குள் தீர்க்கப் படுகின்றன.
பணத்தை தண்ணீராக வாரி இறைப்பதற்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது? ஒரு ஜனநாயக நாட்டில் கடன்களை வாங்கி இப்படி சிறப்பு உதவி, இலவசத் திட்டங்கள், நஷ்டத்தில் இயங்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இலவச பயணங்கள் போன்ற உறுப்படியில்லாத வேலைகளை பொறுப்பற்ற முறையில் அரசுகள் செய்வதைத் தடுக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லையா?
இதெல்லாம் எங்கே போய் முடியும்? தற்போது சட்டத்தில் அதற்கு இடம் இல்லாவிட்டால், அப்படி ஒரு சட்டத்தை இயற்ற வேண்டியது அவசியம் இல்லையா? இல்லையென்றால் அரசியல்வாதிகள் நாட்டையே அடகு வைத்து விடுவார்களே! மன்னிக்கவும், இப்போதும் அதுதான் நடக்கிறது...
இந்த நிலை நீடித்தால் பிற மாநிலங்களிலும் இருக்கும் ஆளும் கட்சிகளும், வாக்காளர்களை கவர்ந்து இழுப்பதற்கு தமிழகம் தொடங்கி வைத்த இதே நடைமுறையை பின்பற்ற ஆரம்பித்தால் அதற்கு முடிவேது? ஊழலை திறம்பட செய்வதற்கும், தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை வாரி வழங்குவதற்கும் திமுகதானே பிற மாநிலங்களுக்கு வழிகாட்டி?
ஒருபக்கம் பொறுப்பற்ற பொருளாதாரக் கொள்கைகள். மறுபக்கம் தோல்விகளுக்கு மத்திய அரசைக் கைகாட்டுகிற மனப்பாங்கு. அது போதாது என்று திராவிட மாடல் என்கிற பிரிவினைவாதம் வேறு. விளங்கின மாதிரிதான்.
பிறகு? ரேஷனில் அரிசி முதற்கொண்டு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், வளர்ச்சி மட்டும் திராவிட மாடலுக்கு சொந்தம். பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் மத்திய அரசு என்றால், அதற்கு என்ன பொருள்?
தேர்தலுக்கு முதல்நாள் வரை அறிவிப்புகளும் அன்பளிப்புகளும் தொடரும்!
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴