ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா…
நீயும் ஆனந்த பைரவி ராகமா…
இதயம் அலை மேல் சருகானதே… ஒரு சந்தன பௌர்ணமி ஓரத்தில்…
வந்து மோதிய இரும்பு மேகமே…
தேகம் தேயும் நிலவானதே… காற்று மலை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட…
கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது…
சுண்டு விரலாய் தொட்டு இழுத்தாய் ஏன் குடை சாய்ந்தது…
காதல் சுகமானது… ம்ம்… சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்…
காதல் சுகமானது… வாசப்படி ஓரமாய்…
வந்து வந்து பார்க்கும்…
தேடல் சுகமானது… அந்தி வெயில் குழைத்து செய்த மருதாணி போல…
வெட்கங்கள் வர வைக்கிறாய்…
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்…
தனியே அழ வைக்கிறாய்… இந்த ஜீவன் இன்னும் கூட…
ஏன் உயிர் தாங்குது…
காதல் சுகமானது… #ஷேர்