ShareChat
click to see wallet page

இந்தக் காணொளிக் காட்சியில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநறையூர் என்கிற நாச்சியார்க் கோவில் என்ற விஷ்ணு ஸ்தலத்தில் மார்கழி, பங்குனி மாதங்களில் பிரம்மோற்சவத்தில் நடைபெறும் கருடசேவை உற்சவமாகும். இந்தக் கருட வாகனம் கல்லினால் வடிவமைப்புக் கொண்டதாகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்தக் கல் கருட வாகனம் கோயிலிலிருந்து புறப்படும் தோளில் சுமக்கும் நபர்கள் 4, 8, 16, 32, 64, 128 என உயர்ந்து பின் கோயிலைச் சென்றடையும் போது 128, 64, 32, 16, 8, 4 எனக் குறைந்து இன்றளவும் தெய்வ சங்கற்பமாகவே நடந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு சிறப்பம்சம் இந்தக் கருடசேவையின்போது கல் கருடனின் உடல் முழுவதும் வியர்வை ஏற்படுத்தும் சிறப்புடையது. ஓம் ஶ்ரீ நமோ நாராயணா. #👌இந்த நாள் நல்ல நாள்🤝

528 காட்சிகள்