அயதுல்லா அலி கமெனி பற்றவைத்த நெருப்பு...
அதை அணைப்பது சாத்தியம் இல்லை, அது தானாக அணையும்போதுதான் அணையும்.
ஈரானின் உச்சபட்சத் தலைவராக (Supreme Leader) இருந்து இஸ்ரேல் - அமெரிக்கத் தாக்குதலில் மரணமடைந்த மிக உயரிய ஷியா மதகுரு மற்றும் அரசியல்வாதி அயதுல்லா அலி கமெனி அவர்கள் இறக்கும் முன் தந்த திட்டப்படியும் கட்டனைப்படியும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான போரினை தொடர்கிறது. தனது இறப்பு போர் தொடர்ந்து நடைபெறுவதற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது.
டிரம்பின் பொய்: ஈரான் சமாதானத்திற்கு தயார் என்று சொல்லி பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக டிரம்ப் பொய் சொன்னார். அதற்கு ஈரானின் மூத்த அரசியல்வாதி அலி லாரிஜானி சமாதானம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறிவிட்டார். அதனால் டிரம்பின் பொய் அம்பலமானது. (ஆப்பரேஷன் சிந்தூரை நான்தான் நிறுத்தினேன் என்று இதுவரை ஆயிரம் முறை டிரம்ப் பொய்களை சொன்னாலும், மோடி அதை ஏற்கவில்லை!) அலி கமெனியைக் கொன்று போரைத் தொடங்கியது இஸ்ரேல்.
இஸ்ரேலின் ஜுன் 2025 தாக்குதலுக்குப் பிறகு, அதுவரை ஈரானில் மைய அமைப்பில் (Centralized) இருந்த ராணுவக் கட்டுப்பாட்டை கமெனி பரவலாக்கினார் (Decentralized). போர் ஆரம்பித்துவிட்டால் பரவலாக்கப்பட்ட ராணுவப் பிரிவுகள், ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளின்படி இயங்க வேண்டும் என்பது திட்டம். இப்போது அப்படித்தான் இயங்கி போர் நடக்கிறது.
இப்போது நடக்கிற போரை நிறுத்தச் சொல்லும் அதிகாரம் அலி கமெனியைத் தவிர யாருக்குமே இல்லை. இன்று அவர் உயிருடன் இல்லை. ஆனால், அவரது திட்டங்கள் உயிர்பெற்று இயங்குகின்றன. தியாகம் என்பதே ஷியா பிரிவின் அடிநாதம் என்பதால் அலி கமெனியின் சாவுக்கு பழிவாங்க IRGC போர்வீரர்கள் உயிரைத் தியாகம் செய்யச் சித்தமாக இருக்கிறார்கள்.
தனக்கு சாவு நேர்ந்தாலும் ஏற்கனவே வகுக்கப்பட்ட திட்டத்தின்படி போர் தொடரவேண்டும் என்பதே அலி கமெனியின் ஏற்பாடு. சர்வதேசச் சட்டவிதிகளுக்கு எதிராக அல் கமெனியை கொன்றதன் பலனை இன்று இஸ்ரேல் - அமெரிக்கா, தாம் ஆரம்பித்த போரை நிறுத்த வழி தெரியாமல் அனுபவிக்கிறது. இன்று அவரது திட்டம் ராணுவப் பள்ளிகளுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பாடமாகி இருக்கிறது.
ஈரான் ஒரு பரந்த நாடு. ஆயுதங்களும் ராணுவமும் பல்வேறு இடங்களில் பிரிந்து நின்று தமக்கிடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிடிருக்கின்றன. அவற்றை கண்டுபிடித்து முற்றிலுமாக அழிப்பது கடினம். அதற்குள் அவர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்றியிருப்பார்கள். இங்கேதான் இஸ்ரேலும் அமெரிக்காவும் வசமாக சிக்கிக்கொண்டனர்.
ஈரான் ஏவுகளை எதிர்ப்பதற்கு பேட்ரியாட், தட் போன்ற வான் எதிர்ப்பு பயன்படவில்லை. ஒரு மலிவான டிரோனை எதிர்கொள்ள மில்லியன் கணக்கில் பணம் கொடுத்து அமெரிக்காவிடம் வாங்கிய எதிர் விசையை பயன்படுத்த வேண்டிய நிலை. அதுவும் போதிய அளவில் ஸ்டாக் இல்லை. ஈரானுடைய கையில் ஏராளமான டிரோன்களும் ஏவுகணைகளும் உள்ளன. அவற்றைத் தடுப்பது சாத்தியம் இல்லை. மேலும், பாதுகாப்பு செலவு விண்ணை முட்டுகிறது.
ரஷ்யாவின் "டெட் ஹேண்ட்" (Dead Hand) என்பது பனிப்போர் காலத்தைச் சேர்ந்த ஒரு தானியங்கி ரஷ்ய அணுசக்தி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பாகும். உயர் தலைமை ஒரு திடீர் தாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்டாலும், கட்டளையுடனான தொடர்பை இழந்தவுடன் தானாகவே ICBM-களை ஏவுவதன் மூலம் ஒரு பெரிய பதிலடி தாக்குதலை இது உறுதி செய்கிறது. இதை Doomsday Machine எனலாம். அலி கமெனியின் வியூகமும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், இது எந்த நாடும் தலைவரும் இதுவரை யோசித்திராத உத்தி!
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴