ShareChat
click to see wallet page

நெல்லை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை கண்டு பிடித்த காவலருக்கு பாராட்டு நெல்லை மாவட்டத்தில் காணாமல் போன 317 செல்போன்களை கண்டுபிடிக்க காரணமாக இருந்த சைபர் கிரைம் காவலருக்கு பாராட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், உத்தரவுபடி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜூ, தலைமையிலான சைபர் கிரைம் காவல்துறையினர் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில், இதுவரை மாவட்டத்தில் காணாமல் போன 317 செல்போன்களை *சைபர் கிரைம் இரண்டாம் நிலை காவலர் திரு.திவாகர்* என்பவர் துரிதமாக செயல்பட்டு மேற்படி காணாமல் போன செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டுபிடிக்கப்பட்டு சைபர் கிரைம் காவல்துறையினர் மேற்படி செல்போன்களை பறிமுதல் செய்துள்ளார். மேற்படி காவலரின் பணியினை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இரண்டாம் நிலை காவலர் திரு. திவாகர் என்பவரை நேரில் அழைத்து பாராட்டி பரிசு மற்றும் வெகுமதி வழங்கி ஊக்குவித்தார் #திருநெல்வேலி_செய்தி

1.1K காட்சிகள்
3 வருடங்களுக்கு முன்