ShareChat
click to see wallet page

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 4- ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது . முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 4- ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நெல்லையில் மத்திய மாவட்ட திமுக சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள திமுக அலுவலகத்தில் கலைஞர் படத்திற்கு மாவட்ட செயலாளரும் , சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்வகாப் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சரவணன் துணைமேயர் ராஜு மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சுப்பிரமணியன் மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுப சீதாராமன் மாமன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, உலகநாதன், சங்கர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து தச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ள அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அஅங்கு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது #திருநெல்வேலி_செய்தி

929 ने देखा
3 साल पहले