நெல்லை அருகே
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் சிவன். இவரது மகன் இசக்கிமுத்து இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இசக்கிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சீவலப்பேரி போலீசார் அங்கு விரைந்து சென்று இசக்கிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருநெல்வேலி_செய்தி