🙏 ஸ்தோத்திரம்! அல்லேலூயா! 🙏
📖 இன்றைய வேத தியானம் – 12.08.2026 📖
📖 ஏசாயா 1:19-20
«“நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.”»
🙌 அல்லேலூயா! ஸ்தோத்திரம்!
❤️ “நீங்கள் மனம்பொருந்தி” என்று சொல்லும்போது, மனம்பொருந்துவது என்றால் என்ன?
💭 நீங்கள் கூட உங்கள் வாழ்க்கையில் பார்த்திருப்பீர்கள்; “இந்த நபர் எனக்குச் செட் ஆகாது, மற்றவர்களோடு அவர்களுக்கு இருக்கும் spirit எனக்குச் செட் ஆகாது” என்று சொல்லி, உங்கள் வாழ்க்கையில் நீங்களே விலகிப் போயிருப்பீர்கள்.
💔 இயேசுவுடைய Spirit-க்கும், தேவனுக்கும் நமக்கும் உள்ள connection — இவர்களோடுதான் அதிகமாக time spend பண்ண வேண்டும் என்று எப்போதும் ஏக்கமும், விருப்பமும் இருக்க வேண்டும். ❤️🔥
🙏 இயேசப்பாவிடம் ஐக்கியம் பெற்று, அவரோடு மனம்பொருந்தி, நீங்கள் செவிகொடுத்தால் மட்டுமே தேசத்தின் நன்மையைப் புசிக்க முடியும்.
📖 இதுதான் பரலோகம் ஏற்படுத்தின சட்டம்.
🙇♀️ இந்தச் சட்டத்திற்கு நீங்கள் கீழ்ப்படிந்தால்தான் தேசத்தின் நன்மையைப் புசிக்க முடியும்.
💭 நீங்கள் நினைக்கலாம், “மற்றவர்கள் நன்மையைப் புசித்திருக்கிறார்களே” என்று.
⚠️ அதற்குத்தான் ஆண்டவர் சொல்கிறார்: “தேவனோடு மனம்பொருந்த மாட்டோம்” என்று எதிர்த்து நிற்பீர்களாகில், பட்டயத்துக்கு இரையாவீர்கள்.
🍽️ நீங்கள் புசிக்கலாம், ஆனால் பிரச்சனை வரும், போராட்டம் வரும், நெருக்கடி வரும். 😔
⚠️ நோய்கள் வரும், பெலவீனங்கள் வரும்; அதில் நீங்கள் இரையாவீர்கள்.
🙏 நாம் ஜெபிப்போமா?
💭 எப்படி ஜெபிக்க வேண்டும்?
🙌 ஸ்தோத்திரம்!
❤️ கர்த்தரோடு மனம்பொருந்தி, செவிகொடுக்கக்கூடிய இருதயத்தை கர்த்தர் கொடுக்க வேண்டும்.
🙏 ஆமென்!
❤️ என் இயேசப்பா, உம்மோடு கூட மனம்பொருந்தி, உமக்குச் செவிகொடுக்கிற இருதயத்தை நீர் எனக்குத் தாரும், தாரும்.
✝️ மீட்பர் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், நல்ல பிதாவே. ஆமென்! 🙏❤️ #jesus