ShareChat
click to see wallet page

*ஸ்ரீபாத ஸப்ததி* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:11* சூர்யேந்த்வக்னிஸமீரணாதிஸகலஸ்வர்வாஸிநா முன்மத: ஸர்வாண்யேவ பதானி யோ மதிதவான் துர்வாரசௌர்யோஷ்மணா தம் கோரம் மகிஷாஸுரம் நிஜபதேனைகேன ஸம்மிருத்நதீ யத்வம் ப்ரத்யக்ருதாஸ்தத: கிமபரம் த்வத்வைபவம் ப்ரூமஹே சிவே! மகிஷாஸுரன் பிறரால் வெல்ல முடியாத தன்னுடைய மிகுந்த பராக்கிரமத்தினால் பராக்கிரமத்தினால் உன்மத்தனாக ஆகி, ஸ்வர்க்கத்திலுள்ள சூரியன், சந்திரன், அக்கினி, வாயு முதலிய எல்லா தேவதைகளுடைய பதவிகளைப் பறித்துத் துன்புறுத்தினான். நீயோ உ உன் ஒரே ஸ்ரீபாதத்தினால் அப்பேர்ப்பட்ட பயங்கரமான மகிஷாஸுரனை அழித்து அவனுக்கு தக்க பதிலடி கொடுத்தாய். அதன் பிறகு (வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாத) உன்னுடைய வேறு எந்த வைபவத்தை என்னால் எடுத்துரைக்க முடியும்? மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம் 11ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐

877 ने देखा
1 दिन पहले