அவள்
உடைந்த கண்ணாடியில்
தெரியும்
உதிர்ந்த விம்பத்திலும்
அழகாய் இருப்பாள்…!!
குவியமில்லா
காட்சியிலும்
அவள் உருவம்
கண்ணைப்பறிக்கும்..!!!
காந்த விழிகள்;
பனியுறங்கும்
குளிர் இதழ்கள்…!!
பஞ்சனைப் பாதம்….
பாவம்
நான்
காதல் சொல்லத் தெரியாது
கவிஞன்
ஆனது தான் மிச்சம்…!!!
அவள் கடந்து போகும்
பாதையெல்லாம்,
பூக்கள்
முகவரியற்றுத் தவிக்கின்றன…!
சொல்லிவிடத் துடித்த
என் வார்த்தைகளோ,
அவள் நிழல் தீண்டியதும்
மௌனத்தில் தற்கொலை செய்துகொள்கின்றன…!
காதல் சொல்லத் தெரியாமல்
நான் கிறுக்கிய கவிதைகளில்,
அவள் வாசிக்காமல் போன
வரிகள் தான்...
ஆக அழகானது...!!! #அவள்