ShareChat
click to see wallet page

கட்சி உடைந்தாலும் பரவாயில்லை, நாற்காலியை விடமாட்டேன்... தவெகவில் வேட்பாளர்கள் யாரென்று தெரியாமலேயே விழுந்த ஓட்டுக்கள் அத்தனையும் விஜய்க்காக விழுந்தன. அதே போல சீமானையும் சொல்லலாம். அப்படி எத்தனை ஓட்டுக்கள் EPS க்காக விழுந்திருக்கும்? நமது தளத்தில் பல காலமாகவே EPS அவர்கள் அதிமுகவை ஒழிக்காமல் ஓயமாட்டார் என்று ஒரு ஆதங்கத்தில் எழுதி வந்தோம். கட்சியில் அவருடைய எதேச்சாதிகாரத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவர எந்த விதமான முயற்சிகளும் கடந்த தேர்தல் வரை எடுக்கப்படவில்லை. தேர்தலுக்குப்பின் "திருவிழாவில் தொலைந்த பிள்ளையை" போல அதிமுக கலக்கத்தில் இருக்கிறது. இன்று அதிமுகவில் குடுமிப்பிடிச் சண்டை உச்சத்தில் இருந்தாலும், ஊடகங்கள் பொருட்படுத்துவதே இல்லை அதை. ஊடகங்களில் விஜய் மற்றும் தவெக பற்றிய செய்திகளே பிரதானம். அதற்கடுத்ததாக காங்கிரஸ் மீது திமுக தொடுத்த கண்டனக் கணைகள்! அதிமுகவில் பூகம்பமே வெடித்தாலும் அதைப் பற்றிப் பேச நாதியில்லை. அதன் TRP ரேட் பாதாளத்திற்கு சரிந்தது! இப்போது பொறுத்தது போதும் என்று அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் பொங்கி எழுந்து விட்டார்கள். தற்போது 30+ MLA க்கள் சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி தலைமையில் தனி அணியாக உருவெடுத்து கட்சியை உடைக்கக் காத்திருக்கிறார்கள். இது ஓரளவு எதிர்பார்த்ததுதான். விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் இந்தியன் முஸ்லிம் லீக் MLA க்கள் வெளியில் இருந்துதான் திமுகவின் சம்மதத்துடன் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கிறார்கள். இங்கு 'திமுகவின் சம்மதத்துடன்' என்பதை அடிக்கோடிட வேண்டியது அவசியம். அது சம்மதமா அல்லது அனுமதியா என்பது சர்ச்சைக்குரிய விஷயம். ஒரு சரியான சந்தர்ப்பத்தில் இடதுசாரிகள் ஊடுசெங்கல் உருவுகிற சூழ்நிலை வந்தால் தவெகவின் ஆட்சியை காப்பதற்கு அதிமுகவில் ஒரு பிரிவு துடிப்புடன் இருக்கிறது. அதற்குள் கட்சியை உடைத்து அதற்கு தயாராக இருக்கவேண்டும் என அந்தப் பிரிவு செயல்படுவதாகத் தெரிகிறது. EPS தூக்கி எறிந்த தலைவர்கள் பட்டியல் வெகு நீளமானது. சசிகலா, OPS மற்றும் பல செல்வாக்கான முன்னணித் தலைவர்களை தயவு தாட்சண்யம் இன்றி கட்சியில் இருந்து EPS வெளியேற்றினார். (இன்று OPS எதிர்க்கட்சித் தலைவரானாலும் ஆச்சரியம் இல்லை!) ஆனால், கடைசியில் செங்கோட்டையன் வெளியேற்றப்பட்டதை யாராலும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அடுத்து, பாஜக, தமாக போன்ற பிற கட்சிகளிடமும் தொகுதி பங்கீட்டில் EPS பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளாமல் துரோகம் இழைத்தார். குறிப்பாக அண்ணாமலையை மோசமானப் பழிவாங்கினார். அதிமுகவின் தோல்விகளுக்கு இப்படி காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அத்தனைக்கும் சூத்திரதாரி EPS தான். நேரங்கெட்ட நேரத்தில் மகன் மிதுனைவேறு வேலையில் இறக்கியுள்ளார். கடந்த தேர்தலில் வடமாவட்டங்களில் அதிமுக பெற்ற வெற்றிக்கு பாமக காரணமாக இருந்தது எனலாம். ஆனால், தேர்தலுக்குப்பின் பாமகவை EPS கண்டுகொள்ளவேயில்லை. சட்டசபை, பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சி என பத்துக்கும் மேற்பட்ட தேர்தல்களில் அதிமுக EPS தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்தது. அது அதிமுக வரலாற்றில் இல்லாதது. ஆகவே, தற்போதாவது EPS கண்ணியத்துடன் தலைமைப் பதவியில் இருந்து தானாகவே விலகியிருக்க வேண்டும். அதை அவர் செய்யத் தவறியது அதிமுகவை மேலும் பலவீனப் படுத்திவிட்டது. இப்போது அதிமுக கட்சி பிளவுபடும் தருவாயில் இருக்கிறது. கட்சி உடைந்தாலும் பரவாயில்லை, நாற்காலியை விடமாட்டேன் என EPS இருக்கிறாரே என கட்சியில் அனைத்து மட்டத்தினரும் நொந்து கொள்கிறார்கள். (கட்சித் தலைவரான பின்னும் சேலம் மாவட்டச் செயலாளர் பதவியை அவர் லேசில் விடவில்லையே!) EPS பாணியில் சொல்வதானால் MGR/J ஆவிகள் அவரை மன்னிக்காது! #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴

812 ने देखा
2 दिन पहले