#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பதினோராம் திருமுறையில் இருந்து நம்பியாண்டார் நம்பி அருளிய ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்* *ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் என்பது சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இந்நூல் மொத்தம் 11 கட்டளைக்கலித்துறைப் பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் "சண்பையர் காவலன் சம்பந்தனே" என்று முடிகிறது. ஞானசம்பந்தர் உமையம்மையிடம் ஞானப்பால் அருந்தியது, சமணர்களை வாதில் வென்றது உள்ளிட்ட அவரது வரலாற்றுச் சிறப்புகள் இதில் பாடப்பட்டுள்ளன. நம்பியாண்டார் நம்பி இயற்றிய இந்நூலில் காணப்படும் திருஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாறே, பிற்காலத்தில் சேக்கிழார் பெருமான் தனது திருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்) எனும் நூலை விரிவாக எழுத பெரிதும் உதவியது.* பாடல் வரிகள் : *பதினோராம் திருமுறையில் இருந்து நம்பியாண்டார் நம்பி அருளிய ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்* பாலித் தெழில்தங்கு பார்முகம் உய்யப் பறிதலையோர் மாலுற் றழுந்த அவதரித் தோன்மணி நீர்க்கமலத் தாலித் தலர்மிசை அன்னம் நடப்ப அணங்கிதென்னாச் சாலித் தலைபணி சண்பையர் காவலன் சம்பந்தனே. 1 கொங்குதங் குங்குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லி பங்குதங்கும் மங்கை தன்னருள் பெற்றவன் பைம்புணரிப் பொங்குவங் கப்புனல் சேர்த்த புதுமணப் புன்னையின்கீழ்ச் சங்குதங் கும்வயற் சண்பையர் காவலன் சம்பந்தனே. 2 குவளைக் கருங்கண் கொடியிடை துன்பம் தவிரஅன்று துவளத் தொடுவிடம் தீர்த்த தமிழின் தொகைசெய்தவன் திவளக் கொடிக்குன்ற மாளிகைச் சூளிகைச் சென்னியின்வாய்த் தவளப் பிறைதங்கு சண்பையர் காவலன் சம்பந்தனே. 3 கள்ளம் பொழில்நனி பள்ளித் தடங்கடம் ஆக்கிஅஃதே வெள்ளம் பணிநெய்தல் ஆக்கிய வித்தகன் வெண்குருகு புள்ளொண் தவளப் புரிசங்கொ டாலக் கயல்உகளத் தள்ளந் தடம்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே. 4 ஆறதே றுஞ்சடை யான்அருள் மேவ அவனியர்க்கு வீறதே றுந்தமி ழால்வழி கண்டவன் மென்கிளிமாந் தேறல்கோ தித்தூறு சண்பகம் தாவிச் செழுங்கமுகின் தாறதே றும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே. 5 அந்தமுந் தும்பிற வித்துயர் தீர அரனடிக்கே பந்தமுந் தும்தமிழ் செய்த பராபரன் பைந்தடத்தேன் வந்துமுந் தும்நந்தம் முத்தங் கொடுப்ப வயற்கயலே சந்தமுந் தும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே. 6 புண்டலைக் குஞ்சரப் போர்வையர் கோயிற் புகஅடைக்கும் ஒண்டலைத் தண்டமிழ்க் குண்டா சனிஉம்பர் பம்பிமின்னும் கொண்டலைக் கண்டுவண் டாடப் பெடையொடும் கொக்குறங்கும் தண்டலைக் குண்டகழ்ச் சண்பையர் காவலன் சம்பந்தனே. 7 எண்டலைக் குந்தலை வன்கழல் சூடிஎன் உள்ளம்வெள்ளம் கண்டலைப் பத்தன் கழல்தந்த வன்கதிர் முத்தநத்தம் விண்டலைப் பத்தியில் ஓடும் விரவி மிளர்பவளம் தண்டலைக் கும்கடற் சண்பையர் காவலன் சம்பந்தனே. 8 ஆறுமண் டப்பண்டு செஞ்சொல் நடாத்தி அமண்முழுதும் பாறுமண் டக்கண்ட சைவ சிகாமணி பைந்தடத்த சேறுமண் டச்சங்கு செங்கயல் தேமாங் கனிசிதறிச் சாறுமண் டும்வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே. 9 விடந்திளைக் கும்அர வல்குல்மென் கூந்தல் பெருமணத்தின் வடந்திளைக் குங்கொங்கை புல்கிய மன்மதன் வண்கதலிக் கடந்திளைத் துக்கழு நீர்புல்கி ஒல்கிக் கரும்புரிஞ்சித் தடந்திளைக் கும்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே. 10 பாலித்த கொங்கு குவளைகள் ளம்பொழில் கீழ்ப்பரந்து ஆலிப்ப ஆறதே றுங்கழ னிச் சண்பை அந்தமுந்து மேலிட்ட புண்டலைக் குஞ்சரத் தெண்டலைக் குந்தலைவன் கோலிட்ட வாறு விடந்திளைக் கும்அர வல்குலையே. 11 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

1K views • 1 months ago
00:00
00:52

#🙏ஆன்மீகம் #🙏நமசிவாய ஓம்✨ #🥰அன்புடன் காலை வணக்கம்🌞

3K views • 16 hours ago
00:00
01:49