கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 01.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
இன்ன முன்காலம் இயம்புவேன் கேள்மகனே
தன்னந் தன்னாலே சாதிக்குச் சாதிமாளும்
.
விளக்கம்
==========
இன்னும் உன்னுடைய நல்ல காலம் பற்றிக் கூறுகிறேன். கேட்பாயாக. தம்மைத் தாமே அழித்துக் கொண்டே ஒவ்வொரு சாதியும் அழியும்.
.
.
அகிலம்
========
நல்ல நினைவோர்க்கு நாளெத்தனை யானாலும்
பொல்லாது வாராமல் புவிமீதில் வாழ்ந்திருப்பார்
.
விளக்கம்
==========
எப்பொழுதும் நல்ல எண்ணம் உள்ளவர்கள் எவ்வளவு காலமானாலும் துன்பம் வராமல் இன்பமாகவே பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பர்.
.
.
அகிலம்
========
நாட்டி லொருஅனுமன் நல்லவனை நானயச்சு
கோட்டிசெய் யென்றுரைப்பேன் கோமகனே வுன்காலம்
.
விளக்கம்
==========
நாட்டில் ஓர் அனுமனாகிய நல்லவனை நான் அனுப்பி பல குறும்புகள் செய்யக் கூறுவேன். என் மகனே, அதுவே உன் நற்காலம்.
.
.
அகிலம்
========
முறைதப்பி யாண்ட முகடன் வெறும்நீசன்
குறைநோவு கொண்டு கூடிழப்பா னுன்காலம்
.
விளக்கம்
==========
அச்சமயத்தில் சட்ட முறைகள் தப்பி ஆளும் முகடன் ஆகிய முழு நீசன் தீய நோயினால் நோவு கொண்டு இறந்து விடுவான். அதுவே உன் நற்காலம்
.
.
அகிலம்
========
அதிலே சிலபேர் அரசுனக் கெனக்கெனவே
விதியை யறியாமல் வெட்டிக்கொண் டேமாள்வார்
அத்தருண முன்காலம் அதிகமக னேகேளு
.
விளக்கம்
==========
அவனுடைய சந்ததியர் சிலபேர் அரசு உரிமைக்குப் போட்டியிட்டுத் தமது விதியை அறியாமல் தமக்குள்ளே வெட்டி அழிவர். அச்சமயம் உன் நற்காலம் இதை நீ அறிந்து கொள்ளுவாயாக.
.
.
அகிலம்
========
இத்தருண மல்லால் இன்ன மெடுத்துரைப்பேன்
எல்லோருங் கைவிட்டு இருப்பாருனைத் தேடாமல்
நல்லோர் மனதில் நாரணா என்றுரைப்பார்
.
விளக்கம்
==========
இவை மட்டுமல்லாமல் இன்னும் எடுத்து உரைக்கிறேன் கேட்பாயாக. எல்லாரும் உன்னைத் தேடாமல் கைவிட்டபடி இருப்பர். நல்லவர்கள் மனத்தினுள்ளே நாரணா என்று உரைத்தபடி இருப்பர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar