ShareChat
click to see wallet page

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். தனபால் (37), அவரது மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17) மற்றும் உறவினர் சினேகா (23) சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த சுர்ஜித் (12) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாரி ஓட்டுநர் சரவணன் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #😱கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி😢

631 ने देखा
2 घंटे पहले