மக்களின் வரிப்பணம்... சிலைகளுக்கு அல்ல, சேவைகளுக்கு!
Audio Track:
https://drive.google.com/file/d/1K_krGg5SmpTG_cqEsEZzymmWNsjsV67g/view?usp=drivesdk
தமிழகத்தில் அம்பேத்கருக்கு அடுத்தபடியாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோருக்கு அதிகளவில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று, வள்ளியூரில் கருணாநிதி சிலையை அமைக்க தமிழக அரசு அனுமதி கோரிய மனுவை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
பெரும்பாலான அம்பேத்கார் பெரியார் மற்றும் காமராஜர் சிலைகள் தனியார் அல்லது பொதுமக்களாலும், பல்வேறு அரசியல் கட்சிகள், தலித் அமைப்புகள் மற்றும் திராவிடர் கழகம் போன்ற இயக்கங்களாலும் நிறுவப்பட்டவையாகும். ஆனால், அரசாங்கமே தன் சொந்தச் செலவில், அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அமைத்த வகையில் பேரறிஞர் அண்ணாவின் சிலைகளே அதிகம்.
1971-ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு அவர் உயிருடன் இருக்கும்போதே முதன்முதலில் சிலை வைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. பின்னர் சில ஆண்டுகள் கழித்து இந்தச் சிலை சில சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டு அகற்றப்பட்டது. பிறகு அவர் மறைந்த பின்னர் சிலைகள் நிறுவப்பட்டன.
அரசுச் செலவில் தலைவர்களுக்குச் சிலைகள் அமைப்பதை எதிர்த்து நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன. பெரும்பாலான சிலைகள் ஒழுங்காக பராமரிக்கப்படுவதில்லை. பல சிலைகள் பெருகி வரும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உன்ளன. அரசாங்க பணத்தில் தலைவர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரம் ஒழியவேண்டும்.
#உச்சநீதிமன்றம் #பொதுநிதி #சமூகநீதி #தமிழகஅரசு #கருணாநிதி #நல்லாட்சிமுறை
Samsung Galaxy M36 5G #Ad
https://link.amazon/B0fIIgc3Y
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴