தாய் கிழவியும் தமிழும்
மங்கலச்சொல், இடக்கர் அடக்கல் ஆகியவை தமிழின் பாரம்பரியத்தின் ஒரு பரிணாமம் என்றால் அது மிகையில்லை. இது தொன்மையான தமிழ் மரபாகும்.
மங்கலமற்ற சொற்களைத் தவிர்த்து, நல்ல சொற்களைப் பயன்படுத்துவது தமிழரின் பண்பாடாகும். எடுத்துக்காட்டாக, 'இறந்தார்' அல்லது 'செத்தார்' என்பதை 'எய்தினார்' அல்லது 'துஞ்சினார்' என்று கூறுகிறோம்.
சமீபத்தில் தாய் கிழவி படத்தை பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பீர்கள். அதில் 'தாய் கிழவி' ராதிகா 'தூமை' என்ற வார்த்தையை ஒரு காட்சியில் பேசியிருப்பார். அதாங்க 'Whisper' சமாச்சாரம்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கை, மங்கல வழக்கில் தூய்மை என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள். 'தூய்மை' என்ற சொல்லே பிற்காலத்தில் 'தூமை' என்று மறுவி அமங்கலச் சொல்லானது சோகம்!
ராதிகா செய்த அந்த வார்த்தைப் பிரயோகத்தைப் பார்த்த 'தாய் கிழவி' படப்பிடிப்பில் இருந்தவர்கள் சிரிக்கவும் அவருக்கு அது ஏன் என்று புரியவில்லை.
படப்பிடிப்பில் இருந்த யாரோ ஒருவர் "ஒரு கெட்ட வார்த்தையை நீங்கள் சரளமாகப் பேசியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது" என்று கூறியிருக்கிறார்.
அப்போதுதான் 'தூமை' என்று புழக்கத்தில் இருந்த ஒரு சொல்லின் பொருள் தெரியாமல் தான் அதைப் பேசியதை உணர்ந்து ராதிகாவும் சிரித்திருக்கிறார்.
இடக்கரடக்கல் என்பது, சபையில் அல்லது பலர் முன்னிலையிலோ கூறத்தகாத, தவிர்க்கப்பட வேண்டிய சொற்களுக்குப் பதிலாக, நாகரீகமாக வேறொரு சொல்லைப் பயன்படுத்துவதாகும்.
இடக்கர் (தவிர்க்க வேண்டிய சொல்) + அடக்கல் (மறைத்தல்) = இடக்கரடக்கல். உதாரணமாக, "சிறுநீர் கழிக்கச் சென்றான்" என்பதற்குப் பதிலாக "ஒன்றுக்குச் சென்றான்" என்று கூறுவது இடக்கரடக்கல்.
மங்கலச் சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம், இறுக்கமான சூழ்நிலைகளிலும் நேர்மறையான எண்ணங்கள் மேலோங்குகின்றன அல்லது பேச்சுவழக்கு நாகரீகமடைகிறது.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை