*ஸ்ரீபாத ஸப்ததி*
புதிய தொடர் பதிவு!
*ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:19*
பூர்வம் வ்யாகரண
ப்ரபஞ்சன விதௌ லப்த்வாப்யனேகம்
பதம் கிம் நோ த்ருப்திமகாதகாதிபஸுதே சேஷ பணிக்ராமணீ: ஆலீன: சசிமெளலிமூர்த்தனி சிரம் ப்ரேமப்ரகோபாந்தௌ லப்தும் தே பதமேகமேவ குதுகீ நித்யம் யதோ வர்ததே
ஹிமவானுடைய புத்திரியே! முன்பு ஸர்ப்பராஜனான சேஷன் (பதஞ்சலிரிஷியாக இருந்து கொண்டு) ஸம்ஸ்க்ருத வ்யாகரணத்திற்கு (அதாவது இலக்கணத்திற்கு) பாஷ்யம் எழுதி அநேக பதங்களை * (அதாவது வார்த்தைகளை) உண்டு பண்ணினார். ஆனால் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.
அதனால் சேஷன் சிவனுடைய சிரஸின் மீது மாலை வடிவத்தில் எப்பொழுதும் இருந்து கொண்டு சிவன் பிரணய கோபத்தில் நமஸ்கரிக்கும் போது உன்னுடைய ஒரு பதத்தை* (அதாவது ஸ்ரீபாதத்தை) யாவது அடைந்து விடுவோம் என்று நிரந்தரமாக குதூகலித்துக் கொண்டிருக்கிறார்.
*பதம் என்னுகிற சொல்லை சிலேடையாக கவி இரு பொருள்பட கையாண்டிருக்கிறார்.
அதாவது வார்த்தை என்று ஒரு பொருள். பாதம் என்று மற்றொரு பொருள்.
மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம்
19ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇♀️பக்தி வீடியோஸ்🛐