💥"திருவண்ணாமலை
கிரிவலம் சிறப்பு கவிதை"🔱
💐💐💐💐💐💐
திருவண்ணாமலை தீபவொளி
திகழும் தருணம்
திரு அருணாசலன் திருவடி
நினைக்கும் மனம்
தினம் தினம் திருப்பதி போல்
திரள் வரும் மக்கள்
திருவிழா போல திரளும்
பக்தர் நெஞ்சங்கள்
திகழும் அண்ணாமலையில்
தீபம் தரும் ஞானம்
திரு கிரிவலத்தில்
தீரும் பாவ சுமைகள்
தினுசான பாதையில்
திரும்பும் மன அமைதி
திருவருள் பொழியும்
தெய்வீக அனுபவம்
திருவடியை சுற்றி
திரும்பும் வாழ்வின் பயணம்
திருவண்ணாமலை தரும்
திருப்தி நிறைந்த ஆனந்தம்
கவியாக்கம்
முருகனருள்
விவசாயக்கவிஞன் 🦚🐓🍀🌾🍃🦚🌴🎋🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #முருகன்