தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.
*பொழிப்புரை*
தூய மாணிக்க மாலையையும் அழகிய ஆடைகளையும் அணிந்திருக்கும் வள்ளியின் நாயகனே, இளமையும் அழகும் உடையவனே, உனது பெருங்கருணையின் காரணமாக ஏற்பட்ட திருவருளால் ஆசை என்கிற தொடர் சங்கிலி போன்ற பெருந் தடைகள் தூள் தூளாக உடைந்து போயின. நான் மோன நிலையை அடைந்துவிட்டேன். இதுவே எனது அநுபூதியாகும்.
🙏 🙏 🙏 🙏 🙏
*வானமாகியும் , மண்ணுலகமாகியும் , மனம் வாக்கு காயத்தால் அறிதற்கு இயலாத உண்மைப் பொருளாகியும் , அடியார்களுக்கு குருவாகியும் , களங்கம் இல்லாத கடவுளாகியும் , எட்டு திசைகளிலும் உள்ளவர் வணங்கிட விளங்கிய என் அருளுடைய இறைவனுமாகிய பேராற்றல் பொருந்திய சரவணப் பொய்கையில் முதற்காட்சி தந்த முருகப்பெருமான் நாள்தோறும் என் தலையைக் காப்பாராக !*
🙏 🙏 🙏 🙏 🙏 #murugan #murugan #Muruga #thiruchentur murug
an #OM MURU🙏